யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

உள்ளத்தால் அழுது விழிகளால் சிரிப்பவர்கள்...!

நட்சத்திரங்கள் துயில் கொள்ள செல்லும் சாமத்து ராத்திரி...
ஐந்தாவது முறையாகவும் தன் நண்பிக்கு எழுதிய காயிதத்தை சரி பார்க்கிறாள் பஸ்ரினா.

"எனதருமை தோழிக்கு... உன் கடிதம் கிடைத்தது... வாழ்வின்  வசந்தமான  திருமண  வாழ்வில்  நீ நுழையப்போகிறாய்... திருமணம் என்பது மார்க்கத்தில் பாதி என்று சொல்வார்கள். .. மரணம் மட்டும், அதற்குப் பின் சுவனத்திலும் உங்கள் காதலும், உறவும் தொடரட்டும் என பிரார்த்திக்கிறேன்.... " - வஸ்ஸலாம், உனதருமை நண்பி பஸ்ரினா.

கவனமாக மடித்து, காகித உறையுள் இட்டு  மேசையில்  கிடந்த  புத்தகத்திற்குள் பத்திரப் படுத்துகிறாள். தம்பி அய்யாஷ் நாளை கிளாஸ் போகும் போது, அவசியம் கொடுத்து அனுப்பச் சொல்ல   வேண்டும். தன் மாவனெல்லை  தோழியின்  திருமணத்திற்கு வாழ்த்துக்கூறி எழுதிய கடிதம். நேரில் செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், குறைந்தது ஒரு  கடிதமாவது எழுதாமல் எப்படி இருப்பது... எத்தனை  ஆண்டு  கால  நீண்ட  நெருங்கிய நட்பு.

கடிதத்தை புத்தகத்திற்குள் வைத்ததும், ஒரு  நெடிய  பெரு  மூச்சி. கண்ணீர் ஊற்று இலேசாக கண்ணில் வட்டம் இட்டிருந்தது. கல்லூரி வாழ்வின் முடிவோடு தான் தொலைத்து விட்ட நட்புச் சொந்தங்களை  நினைக்கையில்  வெளிவரும்  வழமையான பெருமூச்சிதான். ஆனாலும்,  அந்த  பெருமூச்சிக்கும்,  கண்நீரிற்கும்  பின்னால் இன்று இருந்தது நண்பிகளல்ல. அவள்தான். இது போன்ற  கடிதங்கள்  வாழ்த்துச் செய்திகளை சுமந்து தன்னை தேடி எப்போது வரும்...?

பஸ்ரினா  ... அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளை... பிறந்தாலும் மூத்த பிள்ளையாக  பிறந்து விடக்கூடாது என்பார்கள் அல்லவா? அதிலும் வறுமை தலை விருத்து பேயாட்டம் ஆடும் இந்த பாவப்பட்ட ஜனங்களின் குடும்பங்களில் பிறந்து விடவே கூடாது... இப்போது என்னவென்றால் அவள் தங்கச்சி பர்வினும் திருமண பந்தலுக்கு நிற்கிறாள்.

எத்தனையோ சம்பந்தங்கள்... எதுவும் சரிப்பட்டு வருவதாக இல்லை... ஒன்று அவர்கள் எதிர்பார்த்த சீதனமும், வாய்ப்பு வசதிகளும், வெள்ளை தோலும் ஒத்து வரவில்லை.  அல்லது இவர்கள் பார்வையில் நல்ல பையனாக  அமைய வில்லை. சல்லி மட்டும் போதுமா?  அல்லா  ரசூலுக்கு  பயந்து ஈரான்டும் பாக்கோணுமே?

அவளது வயது பருவ பெண்களுக்கு உள்ள பயங்கள் அவளுக்கும் இருந்தன.  ஒரு வேலை தனக்கு  திருமண நடைபெறாமலேயே இருந்து விட்டால் என்ன செய்வது?... இப்படியே வெறுமையாய் சூரியன் உதித்து மறைவதை பார்த்துக்கொண்டே இருப்பதா?

###

விடியக்காலை ஒன்பது மணி  இருக்கலாம்...  இளம் வெயில்,  பச்சை  போர்வை  போர்த்தி வர்ணஜாலம் காட்டிக்கொண்டு இருந்த மரங்களில் பட்டுத் தெளித்தது.  ரயில்  நிலையத்தில் நண்பனை பிரிந்து செல்ல தயங்கும் நண்பனை போல், வெயில் வந்த பிறகும்  நகர மனமின்றி,  அரை  மனதோடு  மெதுமாக  நகர்ந்தது  பனிக்கூட்டம்.

சூழவும் அரண்கள் போல் நிமிர்ந்து நிற்கும் மலைகள்,  அவற்றில்  விரித்த  பசுமை  வர்ண கம்பளிகள், பெருக்கெடுத்தோடும் மகவெளி கங்கை... தெற்காசியாவின்  கிரீன்  forest என்று இதனை பிரகடனப் படுத்தி இருப்பதாக யாரோ சொல்லக்கேட்ட ஞாபகம்... அது உண்மையோ, பொய்யோ அந்த தகுதிக்கு இந்த மலையக கிராமம் முற்றிலும் தகுதியானதுதான்.

பரீனா ... இவள்தான் பஸ்ரினாவின் தாய்... காலை உணவுக்குரிய  தயாரிப்புகளை  செய்து கொண்டு இருந்தாள். அவளது அடுப்பை  போலவே,  வயிறும்  எரிந்து  கொண்டுதான் இருந்தது... கல்யான  வயசுல  ரெண்டு  கொமர  வட்ச்சிட்டு எப்பிடி எறியாம ஈக்குற?

நேற்று வந்திருந்த வரனை  சுற்றித்  தான் பரீனாவின் சிந்தனை  அலை  பாய்ந்து கொண்டு இருந்தது. வந்தது பஸ்ரிநாவுக்கல்ல. தங்கச்சி பர்வினுக்கு.  தங்கச்சிக்கு   வரன்  வருவது இது ஒன்றும் முதல் தடவை  என்றில்லை.  இதற்கு  முன்னும்  ஒன்றிரண்டு தடவை வந்தது. அதற்கு காரணம் பஸ்ரினாவை விட  பர்வின்  கொஞ்சம் நிறமாக  இருந்தது என்பதும் அவளுக்கு தெரியும். என்றாலும் இந்த முறை வந்தது சற்று  நல்லதொரு  வரன். அதை விடவும் விருப்பமில்லை. காரணம், இதை விட்டால் திரும்ப இது போல ஒன்று அமையும் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. ஆனால், மூத்தவள் இருக்க, தங்கச்சியின்  திருமணத்தை  நடத்தவும்  விருப்பமில்லை. என்ன செய்வது?  இலகுவில் ஒரு முடிவுக்கு வர அவளால்  இயலவில்லை. எப்பிடி முடிவுக்கு வாறது?  பெத்த புள்ளகல்ட வாழ்க்க பிரச்சினை எல்லையா இது? .
 ###

காலை நேரம். பஸ்ரினா வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தாள். ஹோல் இல் இருந்த சிறிய புத்தக ராக்கையில் சிதறிக்கிடந்த புத்தகங்களை தூசு தட்டி ஒழுங்கு படுத்தி அடுக்கினாள். வீட்டு மூலைகளில் சிலந்திகள் பின்னிய வலைகளை தும்புத்தடியால் துடைத்தெடுத்தாள்.

 ஒழுங்கின்றி இங்கொன்றும், அங்கொன்றுமாக இருந்த நாற்காலிகளை சரிப்படுத்தினாள். 
தரையை  ஒழுங்காகக்  கூட்டி பெருக்கி எடுத்தாள். ஒரு மூலைக்கு கூட்டி சேர்த்த குப்பைகளையும், தூசையும் ஒரு ஷவளால் அள்ளி டஸ்பினில்     போட்டாள். ஷவளில்  வராத எஞ்சிய மண்ணை கதவை திறந்து வெளியே தள்ளி விட்டாள்.  . கதவடியில் கிடந்த பாபிசை எடுத்து தூசு தட்டி விட்டாள். 

முற்றம் கூட்டுவது, வீட்டை பெருக்குவது என்பன பஸ்ரினா அன்றாடம் செய்யும் வேலைகள். பெரும்பாலும் இவற்றை பஸ்ரினாதான் செய்வாள். 

வீட்டை பெருக்கி முடித்தவள் முகத்தில்  படிந்த  வியர்வை  துளிகளை துடைத்துக் கொண்டால். குளித்து விட்டே காலை சாப்பாட்டை எடுத்தாள் உடம்புக்கு இதமாக இருக்கும். 

குளிக்கத் தேவையான    உடைகளோடு குளிக்க செல்ல முட்பட்டவல் "பஸ்ரினா..." என்ற குரல் கேட்டு திரும்பினாள். சமையலறை வாசலில் தாய் நின்று கொண்டிருந்தாள். 
"ஒன்னோட ஒரு விஷயம் பேசணும்..."
"என்னம்மா...?"
"வா அங்கால ரூமுக்கு போவம்"
முன்னறைக்கு ரெண்டு பேரும் வந்தார்கள்.
"என்ன விஷயம் உம்மா?" 
பரீனா   தயங்கினாள்.  பஸ்ரினாவின் கூர்மையான விழிகளும், அவள் முகத்தில் புரண்டு  விளையாடிய  கேசமும்  இணைந்து  வெளிப்படுத்திய பஸ்ரினாவின் இளமை அழகு பரீனாவை என்னவோ செய்தது. கேட்க வந்ததை கேட்காமலேயே விட்டு விட்டாள் என்ன என்று நினைத்தாள். "என்னமா என்னமோ பேச ஒனுமுண்டு சொன்னீங்க".

பஸ்ரினாவின் கேள்வியால் பரீனா சிந்தனையில் இருந்து மீண்டாள். 
"இல்ல மவள்... ஒரு சின்ன விஷயம்..."
"......"
பரீனா சொற்களை எண்ணி எண்ணி தான் பேச வேண்டி இருந்தது. பஸ்ரினாவின் கண்களை பார்த்து நேரிடையாக கேட்கும் தைரியம் இல்லை பரீனாவுக்கு... 

"இல்ல மகள் தங்கச்சிக்கு ஒரு கல்யாணம் ஒண்டு பேசி வந்தீக்கிற. நல்ல எடம்..." ஒருவாறு கேட்டுவிட்டால். பஸ்ரினாவின் கண்களை நேரடியாக சந்திக்கும் தைரியம் அவளுக்கு இல்லை. தன் மகளுக்கு ஏற்ற மருமகனை தேடி பிடிக்க முடியாத தனது கையாலாகா தனத்தை நொந்து கொண்டாள்.  தான் ஈக்க அவ தங்கச்சிக்கு கல்யாணம் நடக்குறத எந்த கொமர் விரும்புவா? 

உலகம்    தலைக்கு மேல் சுத்துறது மாதிரி இருக்குது பஸ்ரினாவுக்கு... தன் உணர்வை மறைக்கப் பார்த்தாள். கண்களில்  நிறைந்த  கண்ணீர்  காட்டி 
கொடுத்தது.

"நானும் வாப்பாவும் இதப்பத்திதான் நேத்துப் பேசின... வாப்பாக்கும் விருப்பமில்ல, ஒனக்கு முடியாம. அப்பிடி எண்டாலும், இது ஒரு நல்ல எடம். அதான் யோசிக்கிற... ஒனக்கு விருப்பமில்லாட்டி தேவல்ல".

இதற்கு மேலும் அழுகையை கட்டுப்படுத்த பஸ்ரினாவால் முடியவில்லை.
தலையணையில் முகம் புதைத்தபடி விம்மி அழத்தொடங்கினாள். அந்த அழுகை பெத்த மனதை என்னவோ செய்தது. "என்ன படச்ச  நாயனே...  ஏன்ட  புள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்கையை கொடு", வாய் திறந்து பிரார்த்தித்தாள். அந்த பிரார்த்தனை எழு வானங்களுக்கு   மேல் உள்ளவனான சகலதையும் அறிந்த இறைவனிடம் உயர்ந்து சென்றது. 

"அப்பிடி எண்டா தேவயில்ல மகள்"

"இல்ல உம்மா, தங்கச்சிட கல்யாணம் நடக்கட்டும், நல்ல இடங்கள உட்டுட்டு பொறகு கவலைப்பட்டு என்ன பிரயோசனம்"

இப்பிடி பஸ்ரினா சொன்னாலும், அவளது மனதில் எவ்வளவு  பாரம்
 இருக்கிறது என்பதை மற்றொரு பெண்ணான பரீனாவால் உணர்ந்து கொள்ள முடியாததல்ல.


"இன்னம் நாலஞ்சு மாசம் ஈக்கிது மகள்... அதுல்லுக்கு கல்யாணத்த நடத்தினால் போதுமாம். அதுக்கு மொத எங்க சரி ஒரு எடத்த பாப்போம்"

###
தங்கச்சியின் திருமணத்திற்கு ஐந்து மாதம் இருப்பதால் அதற்கு முன் பஸ்ரினாவிதற்கு ஒரு வரனை தேடிவிட வேண்டும் என்ற துடிப்பு பெற்றோருக்கு. வலை விரித்து தேடினார்கள். காலக்கூண்டுக்குள் அடைபட்டுக்கிடந்த நாள் பறவைகள் ஒவ்வொன்றாக பறந்த வண்ணம் இருந்தது. வரன் கிடைத்த பாடில்லை. 

பஸ்ரினாவுக்கு பொருத்தமே இல்லாத சில சம்பந்தங்கள் வந்தன. பஸ்ரினாவின் குணங்களுக்கு எட்டா பொறுத்தமுள்ள ஜென்மங்கள். உதறினார்கள். கிழியை வளர்த்து பூனைக்கு கொடுக்கும் தவறை ஏன் செய்ய வேண்டும்.

மார்க்க வாதிகள் கையை விரித்தார்கள். அவர்கள் பணமும், பதவியும் மட்டும் எதிர்பார்த்தார்கள்.   

சமூகத்தின் மீதான வெறுப்பு... துன்பம் வரும் போது கையை கட்டி வேடிக்கை பார்க்கவும், தவறு விட்டால் குறை சொல்லவும் மட்டும் தானே இந்த பாலாய்போன சமூகத்திற்கு தெரிந்திருக்கிறது. எத்தனை உம்மாமார் தங்க கொமர்கள், ஒரு பொடியனோட பழகுறத கண்டும் காணாம உட்டுட்றாங்க. என்னத்துக்கு? சீதனம், இந்த மாதி பிரச்சினைகள்  இருந்து தப்புறதுக்கு  தானே? இது  சரியா தவறா...  பள்ளிக்குள் குந்தி வாய் கிழிய மார்க்கம் பேசுறவங்க இத லேசா ஹராம்னு சொல்லிடலாம்... ஹராம்னு வாய் கிழிய கத்துறதால மட்டும் இதுகள மாத்திட முடியுமா?
###

இந்த இரவு  இப்பிடியே நீண்டு விடியாமலேயே இருந்து விடக்கூடாதா? நாளை என்ற ஒரு நாள் மட்டும் வராவிட்டால்... விடிந்தால் தங்கச்சி பார்வினின் திருமணம்...
தன்னோடு மண் வீடு கட்டுவது முதல், பாடசாலை போகும் வரை, காகிதக் கப்பல் செய்வது முதல், பரீட்சைக்கு படிப்பது வரை, ஒன்றாக வளர்ந்து, விளையாடி, ஒன்றில் ஒன்று கலந்துவிட்ட தன் தங்கை, மணப்பந்தலுக்கு மட்டும் தனியாகப் போகப் போகிறாள். 

புரண்டு , புரண்டு படுத்துப் பார்த்தாள். தூக்கம் கண்களை தழுவ மறுத்தது. உள்ளம் அமைதியாக  இருந்தாள் தான், உள்ளத்தை அமைதிப்படுத்தும் உறக்கம் வரும் போலும். அவள் உள்ளத்தில் வீசிக்கொண்டிருந்த புயல் காற்றில் அடி பட்டு, உறக்கம் அவளை விட்டும் சேய்மை பட்டுப்  போய்க்கொண்டு இருந்தது.

சமூகம் அவளை பற்றி  என்ன சொல்லும்... அவளிடம் எதாவது குறை இருப்பதாக நினைக்க மாட்டாதா? இல்லாவிட்டால் மூத்தவள் இருக்க ஏன் இளையவளுக்கு திருமணம் செய்ய வேண்டும்? என்று தானே சமூகம் நினைக்கும். அப்படிஎன்றால் இவளின் எதிர் காலம்... ஒரு வேலை காலம் பூராகவும், வாழாவெட்டி என்ற பட்டத்தை சுமந்து கொண்டு இருக்க வேண்டியதுதானா?

அவளது என்ன கடலில் ஆர்ப்பரித்த உணர்வலைகள்....
எப்போது உறங்கினாள்  என்று அவளுக்கு தெரியாது. விழித்தபோது சூரியன் உதித்து விட்டிருந்தான்.   

வழமை போல் முகம் கழுவி விட்டு விளக்கு மாரை எடுத்து முற்றத்திற்கு இறங்கினாள். வெளி ஓரத்தில் அண்டை வீட்டு பெண்கள் இருவர் குசுகுசுத்த குரலில் பேசியது அந்த காலை நேர இதமான மெல்லிய காற்றில்  பறந்து வந்து அவள் செவிகளில் விழுந்தது. 
"என்னவாவது ஒரு குறை இருக்கணும்... இல்லாட்டி தாதாவ  விட்டு எதுக்கு தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்க  ஒனும்."
### 
 (ஓர் உண்மை கதையின் தழுவல்).      Share

வைரமுத்துவின் மூன்று நாவல்கள்...!

கவிஞர் வைரமுத்துவை நம்மில் பலர் ஒரு சினிமா பாடல் ஆசிரியராக மட்டும்தான் அறிந்து வைத்து இருக்கிறார்கள். அவர் ஒரு சிறந்த நாவல் ஆசிரியர் என்பது பலருக்கு தெரியாது. தனது அதிகமான வேலை பளுவுக்கு  மத்தியிலும் மூன்று தரமான சமூக நாவல்களை தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் பரிசளித்திருக்கிறார்.

அவரது சகல நாவல்களிலும் ஒரு தரமான படைப்பை வாசிக்கிறோம் என்று  எண்ணத்தோன்றும்  பக்கங்கள்.  அந்தளவு கடின  உழைப்பை  படைப்புகளின்  தரத்தையும்,  நேர்த்தியையும்  பேணுவதற்கும்,  யதார்த்த பூர்வ தன்மையை உறுதிப் படுத்தவும்,  பாத்திரங்களின்  உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தவும் செலுத்தி இருக்கிறார்.

அவரது "கள்ளிகாட்டு இதிகாசம்" சாகத்திய அகாடமி பரிசு பெற்ற நாவல். தண்ணீர் தேசம், கருவாச்சி காவியம் என்பன மற்ற இரண்டும். வணிக நோக்கை  தாண்டி எழுதப்பட்ட படைப்புகள் இவை (வணிக ரீதியில் பாரிய வெற்றியை ஈட்டி இருந்தாலும் கூட).


வணிக நோக்கு நாவல்கள் அடிமட்ட ரசிகனின் ரசனையை திருப்தி செய்யும்  விதத்தில் வெளிவரும். வாசகனின் மனதில் குரிப்ப்பிடத்தக்க எந்த தாக்கத்தையும்  விளைவிக்க அவை தவறி விடும். வைரமுத்து தன் நாவல்களின்  வருமானத்தை         நம்பி வாழ்பவரல்ல. அதனால் அவரது எழுத்தில் உண்மை உயிரோட்டம் இருக்கிறது. சமூக சிந்தனை இருக்கிறது. தான் எழுத்தில் வடிக்கும் சமூகத்தின் உண்மையான உணர்வுகளோடு வாசகனை சங்கமிக்க செய்து விடவேண்டும் என்ற தேட்டம்  இருக்கிறது.  அதனை அவர் ஒவ்வொரு பக்கத்திலும், வரியிலும் நிறைவு செய்து இருக்கிறார்.

 இந்த நாவல்களை படித்த போது, இன்னொரு மனிதன் வைரமுத்து என்ற பெயருக்குள் மறந்து கொண்டிருப்பதான உணர்வு தான் ஏற்படுகிறது.

"தண்ணீர் தேசம்" கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு சமூக நாவல். மீனவர்களின்  நிலையற்ற ஜீவனோபாயத்தையும், நிச்சமற்ற  வாழ்வையும்  அறிவுபூர்வமாகவும்,  உணர்வு பூர்வமாகவும் சித்தரிக்கும் நாவல். வசதி வாய்ப்புகளோடு செல்லமாக  வளர்ந்து, வாழ்கையின் கஷ்டங்கள் தெரியாமலும், அடிமட்ட மக்களின்  பிரச்சினைகளை  அறியாமலும் இருந்த தன் காதலியின் கடல் பயத்தை  போக்குவதற்காக, கடலிற்கரைக்கு வந்து  , ஒரு மீன்வப்படகில்  மீனவர்களோடு  கடலுக்கு அழைத்து செல்கிறான் ஓர் இளைஞன்.


நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்து விட, மீனவர்களும், இந்த காதல் ஜோடியும் நடுக்கடலில் தத்தளிக்கிறது.  கொண்டு  சென்ற  உணவு  தீர்கிறது.  குடிநீர்  தீர்கிறது. புயல் வேறு அடித்து அழைக்களிக்கிறது. பசியின் கொடுமை: இயற்கையின் சீற்றம்: கடன் காரன் நாள் எண்ணுவது போல், நாட்களை எண்ணி நெருங்கி வர துடிக்கும் மரணம்.

இதனை வாசிக்கும் ஒரு வாசகன் உப்புக்கதகதப்பு தன்னை அனைத்து  கொள்வதாக  நிச்சியம் உணர்வான். உணர்வை மட்டுமல்ல, அறிவியல் உண்மைகளும் ஆங்காங்கு சுட்டிக்காட்டப்படுவது தனிச் சிறப்பு.

மற்றொரு நாவல் கள்ளிக்காட்டு  இதிகாசம். தண்ணீர் தேசத்தில் மீன் வாசம் வீசினால் இங்கு மண் வாசம். பிறந்த மண்ணின்  மகிமையையும்,  அதன்  வாசனையோடு கலந்து விட்ட தனது ஆத்மாவின் உணர்வுகளையும், ஒரு மனிதன் தனது மண்ணை இழைக்கும் போது, அல்லது அதனை  துறந்து  மற்றொரு  பூமிக்கு  செல்லும் போதுதான் உணர்கிறான்.


ஒரு மக்கள் கூட்டத்தின் உணர்வுகளை, அந்த மண்ணின் மைந்தனால்தான்  முழுமையாக  புரிந்து கொள்ள முடியும். அதனை அடுத்தவர் புரியும் விதத்தில்  எடுத்துச் சொல்லவும் முடியும். கள்ளிக்காட்டு இதிகாசம் தன் சொந்த ஊரின் கதை என்கிறார் வைரமுத்து.

ஓர் அழகிய விவசாய கிராமம். அந்த கிராம மக்கள் ஒரு பாரிய விவசாய திட்டத்திற்காக தம் சொந்த ஊரை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். இதுதான்  கதைச்சுருக்கம்.


கள்ளிக்காட்டின் இதிகாசம், அந்தப்பாரிய அணைகளுக்கு  அடியில் அமிழ்ந்து கிடக்கிறது. வெளி ஒருவனின் பார்வையில் சாதாரண நிகழ்வு. ஆனால், வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, பயிர் நட்டு, இரவு பகல் பாராது காவல் காத்து, கலை பிடுங்கி... இந்த உழைப்பில் வாழும் ஒரு விவசாயின் பார்வையில் இந்த நிகழ்வின்  பரிணாமம்  வேறு. பிரதேச மொழி வழக்கு நாவலின் ஒரு சிறப்பு. அத்தகைய ஒரு நடையில், வைரமுத்துவே குறிப்பிடுவது போன்று, அந்த பிரதேசத்தில் வாழ்ந்து, அதன் உணர்வுகளில் கலந்து விட்ட ஒருவனை தவிர, மற்றொருவனால் நினைத்தும் பார்க்க முடியாது.


கருவாச்சி காவியம்:... ஓர் ஆணால் ஏமாற்றப்பட்டு, வாழ்கையில்  சொல்லொணா  துயரங்கள் கண்டு, தன் வானாழை கரைத்து விட்ட ஒரு பெண்ணின் கதை. இன்று எங்கும் இருக்கும் கருவாச்சிதான் இவளும். இந்த கருவாச்சி மதுரையை எரிக்க  வில்லை.  மெழுகாய் தன்னைத்தான் எரித்துக்கொல்கிறாள். இந்த கதை நடக்கும் கிராமிய பின்னணியில் நூலாசிரியர் நன்கு கலந்து விட்டு இருக்கின்றமை ஒவ்வொரு பக்கத்தை புரட்டும் போதும் புலனாகும். பிள்ளை பேற்றில் இருந்து, நாட்டு  மருத்துவம்  உள்ளடங்களாக, சுடு  காடு  வரை  கிராமிய  கலாசாரத்தின்  சகல  அம்சங்களையும்  நூலாசிரியர் வர்ணித்து செல்கிறார்.

வைரமுத்து கிராமிய பின்னணி கொண்டவர்:  கிராமத்தில் பிறந்தவர்:  கிராமத்து  மண்ணில் வளர்ந்தவர். அந்த கிராமத்து உணர்வுகள் அவருள் இன்னும் வாழ்கிறது  என்பதற்கு இந்த நாவல்கள் சான்று.

தமிழ் சினிமாவின் சமகால பாடலாசிரியர்களில் வைரமுத்து முதன்மையானவர்.  தமிழ் சினிமாக்கள் குறித்து எழும் சகல விமர்சனங்களையும் தாண்டி அவர் ஒரு மிகச்சிறந்த கவிஞர். சினிமாவுக்கு வெளியே ஒரு கிராமத்து "மனிதன்" அவருக்குள் மறைத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

"தமிழில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் என்றுதான் என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது" என்கிறார் வைரமுத்து. இந்த
 கூற்று சிறிதும் மிகைப்படுத்தப்படதல்ல என்பதை இந்நாவல்களை வாசித்து முடியும் போது புரிந்து கொள்ளலாம்.
Share

தமிழக அரசியல் கலாசார தளங்களில் தமிழ் சினிமா ஏற்படுத்திய அதிர்வுகள்...(2)

(...முதல் பகுதியின் தொடர்ச்சி..)

கலாசாரத் தளத்தில் ஏற்படுத்திய தாக்கம்
தமிழ் சினிமா தனது செல்வாக்கை ஆழமாக பதித்த மற்றொரு துறை அதன் கலாசாரமாகும். தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ் சினிமா பார்க்கப் படும் இடங்களில் எல்லாம் இந்த கலாசார தாக்கம்  நன்கு அவதானிக்கப்படுகிறது. ஏன்? இலங்கையிலும் கூட.


இது ஒரு விரிவான பகுதியாக இருப்பிதால், கட்டுரையின் சுருக்கம் கருதி, தமிழ் சினிமா ஏற்படுத்திய எதிர்மையான தாக்கம் தொடர்பில்,    பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்தில் அது எத்தகைய செல்வாக்கை செலுத்தி இருக்கிறது என்ற அம்சத்தை மட்டும் இங்கு நோக்குவோம்.

இது தொடர்பில், "Urban Women in Contemporary India" என்ற நூலில் ஸ்ரீ வித்யா ராம் சுப்ரமணியம், மேரி பெத் ஆகியோர் முன்வைக்கும்
தரவுகள் நமது கவன ஈர்ப்புக்குரியான.   இது அகில இந்தியாவையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வாக இருந்தாலும் தமிழ் நாட்டிற்கும் இது பொருத்தமானதுதான். இவ் ஆய்வு தரும் தரவுகளை இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

அண்மைய ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான வன்முறைகள் வேகமாக அதிகரித்துச் செல்கின்றன. 1989 இல் 67,072 ஆக இருந்த பதிவு செய்யப்பட வன்முறைகள் 1993 இல் 84,000 ஆக உயர்ந்தது. 1995 இல் டெல்லி இல் மட்டும் 12,000 கற்பளிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு முக்கியமாக சுட்டிக்காட்டத்தக்க அம்சம் 80%
குற்றச் செயல்கள் பதிவு செய்யப் படுவதில்லை என்பதாகும்.

பொது இடங்களில்  பெண்களை  கேலி  செய்வதும்  இந்தியாவில்  மிகப்  பரவலாக  இடம் பெறுகிறது. இவ்வாறு ஈடு படுவோரில் 30% பேர் கல்லூரி  மாணவர்கள் என்பதோடு, கல்லூரி மாணவர்கள் மத்தியில் 1997 இல் மேற்கொள்ளப்பட்டதொரு கருத்துக்கணிப்பில், 90% ஆன மாணவிகள்  தாம்  எதோ   ஒரு விதத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு    ஆளாகி  இருப்பதாக  தெரிவித்துள்ளனர்.


இத்தகைய குற்றச் செயல்களின் வேகமான அதிகரிப்புக்கு  சினிமா  எவ்வாறு  காரணமாக  இருக்கிறது என்பதை பின்வருமாறு  நூலாசிரியர்கள்  விளக்குகின்றனர்.

இந்தியாவில் வருடாந்தம் சுமார் 800 படங்கள் 22 மொழிகளில் தயாராகின்றன. உலகில் மிக அதிக படங்கள் தயாராகும் இடம் இந்தியாதான். சினிமாவை பார்க்கும் நுகர்வாளர் அளவில் கூடுதலாக
இருக்கும் நாடும் இந்தியாதான். பெரும்பாலும் சமூகத்தின் சகல
தரப்பினரும் சினிமா பார்க்கின்றரனர். வருடாந்தம் 80-90 மில்லியன் பேர் சினிமா பார்க்கச் செல்கின்றனர். சிலர் மாதாந்தம் 20-30 முறை செல்வதோடு தமக்கு விருப்பமான திரைப்படத்தை பல முறை பார்வை இடுகின்றனர். இவர்களில் 5% இனர் மட்டுமே இந்திய தயாரிப்பல்லாத (பெரும்பாலும்  ஹாலிவுட்) படங்களை பார்க்கின்றனர்.

இதற்கு மேலாக, சினிமா பல்வேறு  வழிகளில்  நுகர்வாளர்களை  சென்று  அடைகின்றது. உள்ளூர் தொலைக்காட்சிகள் சினிமாவை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி  வருகின்றன.  கேபிள்  தொலைக்கட்சி  சேவையும் நம்ப முடியா வேகத்தில் வளர்ந்து வருகின்றது. 85% ஆன கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குனர்கள், தமது  சேவையை  விளம்பரப்  படுத்தும் நோக்கில், தினமும் இரண்டு படங்களை ஒளி பரப்பி வருகின்றனர். கணனிப் பாவனை, VCD க்கள், இணைய வசதி என்பன இதற்கு மேலதிகமானவை. இத்தரவுகள் சினிமா இந்தியர்  வாழ்வில்  எவ்வளவு  தூரம்  ஒன்றோடொன்று  பிண்ணிப்பினைந்துள்ளது என்பதை தெளிவாக படம் பிடித்துக்காட்டுகின்றன.


இந்திய வாழ்வில் சினிமாவின் ஆதிக்கத்தையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளையும் ஸ்ரீ வித்யா ராம் சுப்ரமண்யமும், மேரி பெத்தும் பின்வருமாறு தொடர்பு படுத்துகின்றனர்.
"அதிகமாக நுகரப்படுவதால் மட்டும் சினிமா குற்றங்களை தூண்டுகிறது என்று சொல்லிவிட முடியாது. மாறாக, சினிமா மட்டுமே இந்திய கலாசாரத்தில் பாலியல் வெளிப்படையாக   பேசப்படும் ஒரே ஒரே மார்க்கமாக இருக்கிறது என்பதே எமது வாதத்தை மிகவும் வலுப்படுத்துகிறது".
மேற்சொன்ன தரவுகள் தமிழ் நாட்டு சூழலோடும் மிகவும் பொருந்திப் போகிறது என்பதில் மாற்று கருத்து கிடையாது. இந்தியாவில் 22 மொழிகளில் மொத்தமாக  வருடாந்தம்  வெளிவரும் 800 திரைப்படங்களில் 130 படங்கள் தமிழ் நாட்டை தளமாகக் கொண்ட தமிழ் படங்கள். இதைத் தவிர 1/6 சினிமா கொட்டகைகள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றன(www.tamilnation.org).

வேறு    வார்த்தைகளில்  சொல்வதானால், ஒரு சராசரி இந்தியனை விட, ஒரு சராசரி தமிழன் படங்களை பார்க்கிறான்.

UNICEF, SAVE The Children என்பனவற்றின் அனுசரணையோடு இடம்பெற்ற ஓர் ஆய்வில், துணைக்கண்டத்தில் தயாரிக்கப்படும் சினிமாக்கள் கட்டிளமை பருவத்தினர் மத்தியில் பெருத்த செல்வாக்கை செலுத்துவதையும், அதிகாரம், பெண்களோடான உறவில் வன்முறை என்பன அவர்களிடத்தில் ஆழ்ந்த தாக்கத்தை உண்டு பண்ணுவதையும் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ் நாட்டு சினிமாக்கள், குறைந்தபட்சம் இந்திய சினிமாக்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்தில் ஏற்ற்படுத்திய தாக்கம் தொடர்பில் வெளிவந்த ஆய்வுகள் மிகவும் குறைவாக இருந்த போதும், பொதுவாக சினிமாக்கள் ரசிகனின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணுவது வட அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் இருந்து தெரிய  வருகின்றது. ஆளுக்காள் தாக்கத்தின் பரிணாமமும், பரிமாணமும் மாறுபட்டாலும், சினிமா உளவியல் ரீதியில் மிக பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவது என்னவோ பெரிய உண்மை.

ஆதலின் பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்தில் தமிழ் சினிமாக்கள் பெரியதொரு வகி பாகத்தை வகிக்கிறது என்பதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.

தமிழ் சினிமாக்கள் கலாசாரத் தளத்தில் ஏற்படுத்திய எதிர்மறையான தாக்கத்தின் ஒரு அம்சமே இது. கட்டுரையின் சுருக்கம் கருதி, மற்ற அம்சங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்க விட்டு விடுகிறோம்.

சுருக்கமாக சொன்னால், தமிழ் சினிமா தமிழகத்தின் அரசியல், கலாசார தளத்தில் மிகப் பலமான தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. அரசியல் வாதிகள் அரசியல் நோக்கில் சினிமாவை பயன்படுத்தினால், மறுபுறம்  வியாபார  முதலைகள்  கோடி கோடியாக  பணம் சம்பாதிக்க சினிமாவை நாடுகின்றனர். இதில் மக்கள்  ஏமாற்றப்படுகிறார்கள் என்ற உணர்வோ, எரிந்து கருகி சாம்பலாகிப் போகும்  கலாசார பெறுமானங்கள் குறித்த பிரக்ஞையோ இவர்களிடத்தில் கிஞ்சிற்றும் இல்லை.

ரசிகர்களின்  மட்டமான உணர்வுகளை தூண்டி விட்டு அதன் மூலம் தமது திரைப்படங்களுக்கு  விளம்பரம் தேடத்தான் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முற்படுகிறார்கள்.

அரசியல், வியாபாரம்  இந்த  இரண்டு   சக்திகளுக்கும்  இடையில்  அகப்பட்டு  தத்தளிக்கும் நிலையில்   தான் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள். "ஓர் உயிரை கொள்வதை விட பண்பாட்டை கொள்வது தான் கொடுமை  என்பார்கள்.  அத்தகையதொரு கொடுமை தமக்கு எதிராக பொழுதுபோக்கு என்ற பெயரில் இடம் பெறுகிறது என்பதை உணர முடியா நிலையில் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

துணை நின்றவை
  1. Asha Kasbekar Richards, Pop Culture in India: Media, Art and Life Style, ABC-CLIO Publication, 2006
  2. www.tamilnation.org                   
Read More:
தமிழக அரசியல் தளத்தில் தமிழ் சினிமா ஏற்படுத்திய அதிர்வுகள்...!
                     Share


அனைவருக்கும்

இனிய     


நோன்புப் 

பெருநாள் வாழ்த்துக்கள்


Eid Mubarak
Share

தமிழக அரசியல் தளத்தில் தமிழ் சினிமா ஏற்படுத்திய அதிர்வுகள்...!

"தமிழ் சினிமா அதன் எழுபத்தொன்பது ஆண்டுகால வரலாற்றில், தமிழ் நாட்டின் கலாசாரத்திலும்  அரசியலிலும்  மிகவும்  தீர்மானமான  சக்தியாக  வளர்ந்து வந்துள்ளது"
(S.Thedore Baskaran, National Poltics and Entertainment Media in South India- 1880-1945, published in 1996).

பாஸ்கரன் குறிப்பிடுவது போல் தமிழகத்தின் அரசியல், கலாசார  தளங்களில் தமிழ் சினிமா பல அதிர்வுகளை ஏற்ற்படுத்தி வந்திருப்பதோடு,   அவற்றை இயக்கும் இயங்கு 
சக்தியாகவும் செயற்பட்டு வந்திருக்கிறது. தமிழ் சினிமா தமிழக அரசியலினதும், அதன் கலாசாரத்தினதும்  தவிர்க்க  இயலாத  கூறாக    மாறியுள்ளது. தமிழக அரசியலோடு  தமிழ் சினிமா கொண்டுள்ள உறவு குறித்த ஒரு சுருக்கமான முன்னுரையை வழங்குவதற்கு இக்கட்டுரை முனைகிறது.

சுதந்திரத்திற்குப்பிட்பட்ட தமிழகத்தின் அரசியலில் சினிமா துறையினர் 
அழுத்தமாக தமது செல்வாக்கை பதித்து வந்திருப்பது மிகவும் வெளிப்படையானது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவருமே சினிமா துறையை சார்ந்தவர்கள். இவர்களில் கருணாநிதியும் அண்ணாதுரையும் இன்று வரைக்கும் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கதை எழுத்தாளர்களாக கருதப்படுகிறார்கள்.

தமது அரசியல் கருத்துக்களை மிகவும் வெற்றிகரமாக ஜனரஞ்சக மயப்படுத்த சினிமாவை இவர்கள் அனைவருமே 
மிகச் சாதூர்யமாக சினிமாவை பயன்படுத்தினார்கள். நாஸ்தீகம், ஜாதிமுறை எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் இவர்களது திரைபடங்களில் முக்கிய பேசு பொருள்களாக திகழ்ந்தன.

இந்த வகையில் சிவாஜி கணேசன் நடிப்பிற்கு கருணாநிதி வசனம் எழுதிய "பராசக்தி" (1952) இன்று வரை தி.மு.கவின் அரசியல் கொள்கைகளை பறைசாற்றும் வகையில் வெளிவந்த படமாக இருப்பதாக கமல்
 ஹசன் குறிப்பிடுகிறார் (economictimes.indiatimes.com).

கமல் ஹசனுடைய திரைப்படங்களும் நாஸ்தீகத்தையும் இடது சாரி 
கருத்தியலையும் முன்வைத்தன. விஜயகாந்தும் தன்னை அரசியல் உறுதியாக நிலை நிறுத்தி கொள்ளும் பொருட்டு, தன் திரைப்படங்களை மிகவும் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். விஜயகாந்த், கார்த்திக், சரத் குமார் போன்றோர் தமக்கென்று தனித்தனிக்கட்சிகளை 
உருவாக்கிக்கொண்டுள்ளனர்.  2005  இல் உருவாக்கப்பட்ட விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10% வாக்குகளை பெற்றனர். ஒரு புதிய கட்சியாக இந்த வீதம் மிக அதிகமானது என்பது அரசியல் அவதானிகளின் கருத்து. இன்று மூனறாவது பெரிய கட்சியாக திகழும் DMDK எதிர்காலத்தில் தி.மு.க, ஆ.தி.மு.க என்பவற்றிற்கு இணையான கட்சியாக வளர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமே இல்லை.

இதேவேளை, ரஜினி காந்தும் தனது அரசியல் பிரவேசம் குறித்த சமிக்ஞ்யைகளை வெளியிட்டு வருகிறார். அத்தகைய ஒரு பிரவேசம் இடம் பெரும் பட்சத்தில், தமிழக அரசியலில் ஏற்படக்கூடிய திருப்பங்கள் எத்தகையது என்பது குறித்த வாதப்பிரதி வாதம் ஒரு புறம் இருக்க, சினிமா நட்சத்திரங்களின் அரசியல் ஆதிக்கம் இன்னும் ஒரு நீண்ட காலத்திற்கு தொடரும் என்றுதான் தோன்றுகின்றது.

சினிமாவை தன் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியவர்களில் M.G.R முதன்மையானவர். ஒரு முறை அவர் தி.மு.கவிற்கு ஒரு பெரும் தொகை நிதியை வழங்க முன் வந்த போது, அதனை வினயமாக மறுத்த தி.மு.கவின் அப்போதைய தலைவர் அண்ணாதுரை, "உன் இலட்சங்கள் எனக்கு தேவை இல்லை. உன் முகத்தை மட்டும் வந்து காட்டு. அது போதும். இலட்சங்கள் எம்மை தேடி வரும்" என்று கூறி இருந்தார். இதற்கு சிறுது காலத்தின் பின்புதான் M.G.R தி.மு.கவோடு, நேரடி அரசியலில் இணைந்தார் (economictimes.indiatimes.com).

தி.மு.க சினிமா என்ற பிரசார ஊடகத்தை மிக ஆரம்ப காலத்திலேயே மிக நேர்த்தியாக பயன்படுத்திக்கொண்டனர்.
தி.மு.கவை சேர்ந்த கதை ஆசிரியர்கள் கட்சியின் கொள்கைகளை பிரதி பலிக்கும் வகையில் M.G.R இன் 
படங்களுக்கு கதை எழுதியதாக சென்னையை தளமாக கொண்ட சினிமா விமர்சகரும், சமூக விஞ்ஞானியுமான பாண்டியன் தனது M.G.Ramachandran in Film and Politics என்ற நூலில் குறிப்பிடுகிறார். தமது கட்சியின் சின்னத்தையும், வர்ணப்படங்களின் வருகையோடு தமது கட்சியின் நிறத்தையும் திரைப்படங்களில் காட்சிப்படுத்த தி.மு.கவினர் தவறியதே இல்லை.

தாஸ் குப்தா என்பவரின் கணிப்பின் படி, M.G.R இதற்கு மட்டும் தமிழகம் முழுதும் இருபத்தேழாயிரம் ரசிகர் மன்றங்கள் இருந்ததாகவும், 
அவற்றில் ஒன்றரை மில்லியன் பேர்வரை அங்கம் வகித்ததாகவும் தெரிய
வருகிறது. இது ரஜினி காந்த், கமல் ஹசன் போன்றோருக்கு உள்ள ரசிகர்களை விட மிக மிக அதிகம்.

M.G.R ஐப்போல் தெலுங்கு நடிகர்  NTR இற்கும் இதே போன்ற ரசிகர்கள் இருந்ததாகவும், இவர்கள் இருவரினதும் வெற்றியில் ரசிகர் மன்றங்களின் பங்களிப்பை ஒரு சிறுதும் மறுப்பதற்கில்லை என ஆஷா கஸ்பேகா எழுதுகிறார் (Pop Culture In India: Media, Arts and Life Style).

சினிமாவில் நல்லவர்களாகவும், விடுதலை வீரர்களாகவும் வருவோரை நம்பி வாக்களித்து ஏமாந்து போகும் துர்பாக்கியம் தமிழகத்தில் 
இன்றுவரை தொடர்கிறது. தமிழக அரசியல் சமகால நிகழ்வுகளை பார்க்குமிடத்து, கிட்டிய எதிர்காலத்தில் இந்நிலை மாறுவதற்கான எந்த அறிகுறியும் கூட தென்படுவதாக இல்லை.

 துணை நின்றவை
  1. S.Thedore Baskaran, National Politics and Entertainment Media in South India (1880-1945).
  2. economicstime.indiatimes.com
  3. Asha Kasbekar Richards, Pop Culture in India: Media, Art and Life Style, ABC-CLIO Publication,   2006.
  4. M.S.S. Pandiyan, The Image Trap: M.G.Ramachandran in Film and Politics.                                                                                         
Share

அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் யூதர்கள் By: MARK WEBER

(This articles was written by Mark Weber, The director of Institute of Historical Review. He was an expert in the field of history and is also the editor of Historical Review, the official magazine of Institute of Historical Review. I translated this article into tamil for the benifit of tamil readers and was published in Meelparvai, a tamil lenguage magazine in Sri Lanka on its Febrary First week Issue. It should be noted here my original article was edited and summerized by the editors.)

இஸ்ரேல் பல தசாப்தங்களாக சர்வதேச சட்டங்களை மீறி வருவதோடு ஐ.நா. வின் பல்வேறு தீர்மானங்களையும்  புறம் தள்ளி வருகிறது.  இராணுவ    ஆக்கிரமிப்புக்கள், அரசியல் படுகொலைகள்  என்பன அதன் அன்றாட வழக்கங்களாகிவிட்டன. உலகின் பெரும்பாலான நாடுகள், அதன் கொள்கைகளையும் பாலஸ்தீன் மக்களுக்கு எதிரான அதன் செயல் பாடுகளையும் வன்மையாக கண்டிக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில்
 மட்டும் ஊடகங்களும், அரசியல் வாதிகளும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அதற்கு ஆதரவு நல்கி வருகின்றனர். ஆண்டு தோறும் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை  அமெரிக்கா   இஸ்ரேளுக்கு வழங்குகின்றது. இது ஏன் என்பது ஒரு மர்மம நிறைந்த கேள்வியாகவே தோன்றுகின்றது.

1984 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற டெஸ்மன் டுடு    என்பவர் இந்த கேள்விக்கு இப்படி பதில் தருகிறார்:                        

"அமெரிக்காவின் அடித்தளத்தின் மீதே இஸ்ரேஅலிய அரசாங்கம்  அமைந்து  இருக்கிறது.  இஸ்ரேலை எதிர்ப்பது இங்கு செமித்திய இன எதிர்ப்பாக சித்தேரிக்கப்ப்படுகிறது.  அமெரிக்கா  மக்கள் தவறை  தவறு    என்று  கூற அஞ்சுகிறார்கள். ஏனனில், யூத லோபிகள் இங்கு பலம் வாய்ந்த சக்தியாக இருக்கின்றன".
மேற்குறித்த கேள்விக்கு பெஞ்சமின் கிங்க்ஸ் பெர்க் கீழ்வருமாறு பதில் தருகிறார்:
"1960 இல் இருந்து யூதர்கள் அமெரிக்க பொருளாதாரம், கலாசாரம், அரசியல் எனவற்றில் குறிப்பிடத் தக்க   செல்வாக்கை பிரயோகித்து வருகின்றனர். எண்பதுகளில் அமெரிக்க நிதி துறையில்  யூதர்களின்  பங்கு முக்கியமானது. அத்தசாப்தத்தில் இடம்பெற்ற கூட்டு தாபனங்களை இணைப்பது, மீள ஒழுங்கு படுத்துவது போன்ற நிகழ்ச்சி திட்டங்களின் ஊடாக, யூதர்கள்  பாரிய   அனுகூலங்களை  பெற்றனர்".
அமெரிக்க சனத் தொகையில் 2.5% ஆனர்வகளே யூதர்கள் எனினும், அமெரிக்க கோடிஸ்வரர்களில் 50% ஆனவர்கள் யூதர்கள். அந்நாட்டில் உள்ள மூன்று பெரும் தொலைக்காட்சி  தாபனங்களினதும், நான்கு பெரும் திரைப்பட கம்பனிகளினதும் நிறைவேற்று அதிகாரிகளாக இருப்பது யூதர்கள்தான். நியூயார்க் டைம்ஸ் போன்ற செல்வாக்கு மிக்க பத்திரிகைகளின் உரிமையாளர்களாக இருப்பதும் யூதர்கள்தான். அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு  பங்களிப்பவர்களில் 25% ஆனவர்கள் யூதர்கள்தான். தொண்டர் அமைப்புகளினதும், பொது  அமைப்புகளிலும்  உயர் மட்ட அதிகாரிகாக இருப்போரில் 17% பேர் யூதர்கள்.

யூதர்களின் பொருளாதார ஆதிக்கமும் பலமும், யூத சனத்தொகையோடு ஒப்பிடும் போது அளவுக்கதிகமான விதத்தில் ஹாலிவுட் இலும் செய்தி கம்பனிகளிலும் கவனம் செலுத்துகிறது என அமெரிக்க யூத சமூகத்தின் தேசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஸ்டேவென் குறிப்பிடுகிறார்.

வோஷிங்க்டனில் யூத ஆதிக்கம் அங்குள்ள யூத சனத் தொகையை விட மிக பெரியது. அமெரிக்காவின் பெரிய அமைப்புக்களின்  தலைவர்கள் கலந்து கொண்ட ஒரு மாநாட்டின் உரிப்பினர் 1996 இல் பில்  கிளிண்டன்  இன்  தேர்தல்  பிரசார  நடவகிக்கைகளுக்காக செலவிட்ட பணத்தில் 50% யூதர்களுடயது என கணிப்பிட்டு இருக்கிறார். உலகளவில் பிரம்மிக்கத்தக்க கலாசாரத்தை கொண்ட நாட்டில், ஆதிக்கத்துடன், கவனத்தை ஈர்க்கிற நிலையில் யூதர்கள் இருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை மூடி மறைக்க எந்த நியாயமுமில்லை என்கிறார் சினிமா விமர்சகரான மைகள் ஸ்டுவர்ட்.

அமெரிக்கா ஊடகங்களில் யூதர்களின் பங்களிப்பை பிரதி பலிக்கும் வகையில், யூதர்கள் குறித்து  கட்டமைக்கப்பட்ட  சித்திரங்கள்  பரப்பப்பட்டு  வருகின்றன. அமெரிக்காவில் யூதர்கள் உயர்ந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும், தன்னலமற்றவர்களாகவும் நம்பத்தகுந்தவர்களாகவும் காட்டப்படுகின்றனர்.  இதற்காக, ஹாலிவுட் இன் அநேக திரைப் படங்களும் அமெரிக்காவில் உள்ள ஏனைய திரைப்படக்கூடங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வுண்மையை அமெரிக்காவில் உள்ள, கிரிஸ்த்தவ சினிமா தயாரிப்பாளர்களும், நடிகர்களும் உணர்ந்து வைத்துள்ளனர்.

மார்லன் என்ற திரைப்பட தயாரிப்பாளர் ஹாலிவுட் இல் யூத ஆதிக்கத்தை இப்படி தோலுரித்துக் காட்டுகிறார்.
"ஹாலிவுட் யூதர்களால் நடத்தப் படுகிறது.  யூதர்களால்  உரிமை கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தமது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப கருக்களை கவனமாக தேர்வு செய்து கொள்கிரார்கள். உண்மையாக ஒடுக்கப்படும் சமூகம் குறித்து ஹாலிவுட் கிஞ்சிற்றும் கவனம் செலுத்தவில்லை".

இவ்வாறு, அமெரிக்க அரசியலிலும், ஊடகங்களிலும் நிலவிவரும் யூத ஆதிக்கத்தின் ஆபத்தான கூறுகள் குறித்து 1940 களிலேயே எச்சரிக்கைகள்
விடுக்கப்பட்டன. 1941 இல் 7000 பார்வையாலகளுக்கு முன் உரையாற்றிய
சார்லஸ் லின்பேர்க் இந்த ஆபத்தை உலகுக்கு எடுத்துக்காட்டினார். ஐரோப்பவையே கோபமூட்டக்கூடிய  யுத்தங்களில் அமெரிக்கா ஈடுபடுத்தப்படும்  அபாயத்தை சார்ல்ஸ் எதிர்வு கூரினார். இவற்றுக்கெல்லாம் பின்னணியில் இருப்பது யூதர்கள்தான் என்று மிகப் பெரும் சனத்திரளுக்கு முன் அவர் முன்வைத்த கருத்துக்கள் அமெரிக்க யூத சமூகத்தையே ஆட்டம் காணச் செய்தன.

"அவர்கள் எம்மை யுத்தங்களில் ஈடுபட தூண்டுகிறார்கள். அவை அமெரிக்காவுக்கு எந்த நன்மையையும் கொண்டுவராது. "
1978 இல் வெளிவந்த யூத தொடர்பு என்ற நூலில் அதன் ஆசிரியர்  அல்பிரேட்  லிளிந்தால் என்ற யூதர் பின்வருமாறு எழுதுகிறார்.
"சியோனிசம் அமெரிக்க மக்கள் மீது எவ்வாறு  திணிக்கப்பட்டுள்ளது?  யூத தொடர்பின் மூலமாகத்தான் அவர்களின் இனவாதக் கொள்கை யூதர் அல்லாதவர் மீது திணிக்கப் படுகிறது. இதற்கான காரணம் நிதி, வர்த்தகம், கலாசாரம், பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்திலும் அவைகள் ஊடுருவி உள்ளமையே ...!"
கலாசார, புலமைத்துவ மட்டத்தில் நிலவும் யூத ஆதிக்கம், அமெரிக்கர்களின் வரலாற்று நோக்கிலும் ஆழமான பாதிப்பை கொண்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் போது, யூதர்கள் கூட்டாக படு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் Holocaust குறித்த ஊடகப் பிரச்சாரத்தை விட, வரலாற்றை யூத கண்ணோட்டம் ஆக்கிரமித்திருப்பதற்கு வேறொரு உதாராணம் தேட வேண்டியதில்லை.
ஹெப்ரோன் பல்கலை கழக பேராசிரியர் ஒருவர்,
"இது நம்பத் தகுந்ததா? அல்லது பொய்யானதா? வரலாற்றுத்தரவுகளில் இருந்து  கூறப்படுகின்றதா? அல்லது அடுத்தவர்களின் வாய்வழியாக வந்த செய்தியா? என்பதற்கெல்லாம் அப்பால், Holocaust எமது கலாசாரத்தை ஆளும் அடையாளங்களுள் ஒன்றாக மாறி உள்ளது. எந்தளவுக்கெனில், தற்செயலாக  ஒரு மாதமாவது இந்த விடயத்தை சம்பந்தப் படுத்திய ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சி, திரைப்படம், நாடகம், புத்தகம், கட்டுரை, கவிதை என்பன வெளி வராமல் இருக்குமானால் holocaust பற்றிய உணர்வலைகள் திடீரென அதிகரிக்கும் வாய்ப்பே இருக்கிறது."
என்கிறார்.
"இஸ்ரேலை பொறுத்தவரை Holocaust அரசியல்  விமர்சனகளை  எதிர் கொள்வதற்கு  முன் ஏற்பாடாகவும்,  விவாதங்களை   எதிர்  கொள்ளும்  சாதனமாகவும் பயன்பட்டிருக்கலாம். அது யூதர்கள் நீண்ட காலம் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் என்ற உணர்வை தருவதோடு, தமது பாதுகாப்புக்கு  தம்மை  மட்டுமே  நம்ப வேண்டியவர்கள் என்ற மாயையையும் தோற்றுவிக்கிறது. " என்றும் மேலும் அவர் சொல்கிறார்.
பேராசிரியர் நோர்மன் பின்கல்ஸ்டீன் அமெரிக்காவில்  உள்ள  பல்கலை   கழகமொன்றில்  பணியாற்றுபவர். அவர் தனது "Holocaust History" என்ற நூலில் பின்வருமாறு எழுதுகிறார்.
" Holocaust ஐ வலிந்து ஏற்றுக் கொள்வது யூதர்கள் தம் மீதான விமர்சங்களை மூடி மறைக்க கையாளும் தந்திரமாகும். யூதர்களும் இஸ்ரேலும் இளைக்கின்ற 
மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களை மூடி மறைக்க இதனை பயன்படுத்துகிறார்கள். "
தற்போது இஸ்ரேளின் ஆபத்து  உச்ச  நிலையை  அடைந்துள்ளது.  அமெரிக்காவில்  உள்ள சியோனிச லொபிகளோடு கிரிஸ்த்தவ  அமைப்புகளும்  கூட்டு சேர்ந்துள்ளன. இதனால்  இஸ்ரேலின்   நலன்களுக்காக அமெரிக்கா யுத்தங்களுக்குள்
 அடகு  வைக்கப் படுகிறது.  பலமிக்க யூத லோபிகளின்  ஆக்கிரமிப்பு  நடவக்கைகள் தொடரும்  வரை,  பாலஸ்தீனியர்களுக்கு  எதிரான  கொடுமைகள் முடியப்போவது இல்லை. Share

மூன்றாவது பாதையில் ஈரான் சினிமா

சினிமா தனி மனிதனதும்,  சமூகத்தினதும்  சிந்தனை தளத்தில்  ஆழமான  தாக்கங்களை  ஏற்படுத்தி விடக்கூடியது. சினிமா ஏற்படுத்துகின்ற நுண்மையானதும், கூர்மையானதுமான  தாக்கம்  கலாசாரத்தின்  பல்வேறு  கூறுகளிலும்  பலமான  அதிர்வுகளை தோற்றுவித்து விடுகின்றது.

நவா காலனித்துவத்தை நம் மீது திணிக்க முயலும் ஏகாதிபத்திய பெருச்சாளிகளின் உலகமயமாக்கல், புதிய உலக ஒழுங்கு உள்ளிட்ட  கவர்ச்சிகரமான  வார்த்தைகளில்  மயங்கி, கீழைத் தேய சினிமாக்களும், நிர்வாணத்தையும், வன்முறையையும்  தமது ஆபரணங்களாக அணிந்து கொண்டுள்ளன.

பாலிவுட், கோலிவுட், சிங்கள சினிமா உள்ளிட்ட எதுவுமே இதற்கு விதி விளக்கல்ல.

இந்நிலலையில், சீரிய சமுதாயமொன்றின் உருவாக்கத்தை நாம் ஆசிப்போமாயின், எமது சினிமாக்களில் சில ஆரோகியமான மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும்.  இளம் சந்ததி சினிமாவுடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில், அவர்களை ஆரோக்கியமான பாதையில் வலி நடாத்த இந்த மாற்றம் அவசரமானதும், அவசியமானதும் ஆகும்.

ஈரான் சினிமா இத்தகைய ஒரு தனித்துவமான சினிமா கலாசாரம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஹாலிவுட் ஐப் போன்றோ, பாலிவுட் ஐப் போன்றோ, நிர்வாணத்திலும், மாயாஜால வித்தைகளிலும், யதார்த்தத்திதற்கு புறம்பான வீர தீர சாகசங்களிலும் அல்லாமல் தனக்கே
உரியதொரு தனித்துவமானதொரு பாதையை ஈரானிய  சினிமா அறிமுகம் செய்துள்ளது.

இது ஈரானிய நாகரிகத்திற்கே இருக்கின்ற ஒரு தனியான பண்பு. பல்வேறுபட்ட நாகரிகங்களோடு கலந்துறவாடிய போதிலும், தனது தனித்துவத்தை எப்போதும் போல் அது காத்து வந்து இருக்கிறது.

ஆரியர், மேற்ற்கத்தேயர், பாரசீகர் என பல்வேறு நாகரிக செல்வாகிற்கும் வரலாற்றில் ஈரான் உட்பட்டுள்ளது. இருப்பினும் தனது இஸ்லாமிய பண்பாட்டு கலாசார பெருமாங்களை அது எப்போதும் போல் பாதுகாத்து வந்திருக்கிறது. ஈரான் சினிமாவும் இதற்கு ஒரு விதி விலக்கல்ல.

மேற்க்கு சினிமாக்களிடம் இருந்து அவற்றின் தொழிநுட்ப தரம், நேர்த்தி என்பவற்றை பெற்றுக் கொண்டாலும், மேலைத்தேய பாரம்பரியத்தை போல் நிர்வாணம், வன்முறை என்பவற்றுக்குள் ஈரான் சினிமா நுழையவில்லை.

வாழ்வோடு பின்னின்ப்பிணைந்த  கருப்பொருள், யதார்த்ததோடு இயைந்து செல்லும் பாங்கு, எதனையும் மிகைப்படுத்தாத தன்மை, வாழ்வியல் யதார்த்தங்களும், கலாசார கோலமும் மிக நுண்மையாக பிரதிபளிக்கப்படுகின்மை, என்பவையே ஈரானிய சினிமாவின் தனித்துவமான சிறப்பம்சங்கள் என்று சொல்லலாம்.

தமிழ் சினிமாக்களை போல், பெண்கள், ஆட்டம், பாட்டம், கும்மாளம் என்பவைதான் சினிமா என்பதை போலல்லாமல், அதனையும் தாண்டி  இஸ்லாத்தின் வரையறைக்குள் நின்றே சிறந்த படைப்புகளை வெளிக்கொனரலாம்  என்பதற்கு ஈரான் சினிமாக்கள் நடைமுறை சான்றாக திகழ்கின்றன.

வன்மம் மிக்கதாகவும், நிர்வாணம் மிக்கதாகவும் மாறிவிட்ட இன்றைய உலக சினிமாக்களுக்கு முன்னால், மனித குளத்தின் ஆழமான, நுண்மையான உணர்வுகளை ஈரானிய சினிமாக்கள் மனதிற்கு இதமாக முன்வைக்கிறது.

மாஜித் மஜீதி   இனுடைய  Color of Paradise என்ற திரைப்படத்தை பாருங்கள். ஒரு கண் தெரியாத சிறுவன் அதில் கதாநாயகனாக வருகின்றான். ஒரு கண் தெரியாத சிறுவனின் உணர்வுகள் எத்தகையது, சமூக வாழ்விலும், குடும்ப அமைப்பிலும் அவன் எதிர் கொள்ளும் துயரங்கள் எத்தகையது என்பதை படம் சித்தரிக்கிறது.

எம்மை சூழ கண்தெரியாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள் என ஊனமுற்றவர்கள் நிறையப்பேர் வாழ்கின்றனர். எமது வாழ்கை பிரச்சினைக்கும், ஓட்டங்களுக்கும் இடையில், அவர்களது உணர்வுகள் எமக்கு புரியாமலேயே போய்விடுகின்றன. ஆனால், Color of Paradise அத்தகைய ஒரு சிறுவனின் உணர்வுகளோடு எம்மை சங்கமிக்க வைக்கிறது. கிராமியச் சூழல், வனப்பு மிக்க ஈரானின் இயற்க்கை காட்சிகள், யதார்த்தமான பாத்திரங்கள், சிறப்பான படப்பிடிப்பு, உள்ளத்திற்கு அமைதி தரும் இதமான இசை என்பவற்றின் மூலமாக எம்மை கண் தெரியாத ஒரு சிறுவனின் வண்ணமயமான உலகிற்கே எம்மை அழைத்துச் செல்கிறார் மஜித் மஜீதி.

அவரது மற்றொரு திரைப்படமான "Children of Heaven" ஒரு ஏழை குடும்பத்தை குறித்து பேசுறது. மஜிதியின் கேமரா வறுமையை
வித்தியாசமான கோணத்தில் நின்று படம் பிடிக்கிறது.

ஒரு சிறிய ஏழை குடும்பம். இரண்டு பிள்ளைகள். தங்கையின் செருப்பை அண்ணன் தொலைத்து விடுகின்றான். புதிய செருப்பொன்று வாங்க முடியாதளவு
குடும்பம் வறுமையில் வாடுகிறது. குடும்பத்தின் வறுமை நிலை குறித்து இச்சிரார்களும் நன்கு அறிந்திருக்கிறார்கள். எனவே, ஒரு செருப்பை அண்ணன் தங்கை இருவருமாக வைத்து சமாளிக்கிறார்கள்.

படம் நெடுகிலும், இவ் ஏழைச் சிறுவர்களின் உணர்வுகளோடு எம்மை சங்கமிக்க வைக்கிறார் மஜீதி. படத்தின் முடிவில் எத்தனயோ விடயங்களை எமக்கு சொல்லி விடுகிறார்.

ஏழைகுடும்பத்தில் பிறந்த சிறார்கள்தான் என்றாலும், அவர்களுக்கும் ஏனைய சிறார்களை போல் உணர்வுகள், கனவுகள் இருக்கவே செய்கின்றன. இவர்களது உணர்வுகளும் சமூகத்தால்
 புரிந்து  கொள்ளப்பட வேண்டும். அவர்களது கனவுகளுக்கும் பெறுமானம்
வழங்கப் பட வேண்டும். ஏழைகளாக பிறந்து விட்ட ஒரே காரணத்தால்  அவர்களை ஒதுக்கி விட முடியுமா? என மஜிதி கேட்க முனைவது போல் இருக்கிறது.

பொதுவாக ஈரான் சினிமா அனைத்திலும் போல், சமூகத்திற்கு சொல்வதற்கு  நிறைய விடயங்கள் இருக்கின்றன. வெறும் பொழுது போக்கு அம்சமாக மட்டும் ஈரானிய சினிமாக்கள் இல்லை.

இன்றைய, தமிழ் சினிமாக்களை பொறுத்த மட்டில், எந்தவிதமான உருப்படியான கருப்பொருளும் இல்லை. இலாப நோக்கில், இலாபத்தை உச்சப் படுத்துவதே, இயக்குனர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. கதாநாயகன்- கதாநாயகி, காதல், முத்தம், கட்டியணைப்பு, சில பாடல் காட்சிகள், காதலுக்கு ஆப்பு வைக்க முனையும் வில்லன், சில சண்டை காட்சிகள், காதல் வெற்றி...ரஜனி காந்த் போன்ற சூப்பர் ஸ்டார் முதல் சாதாரண புதுமுக நடிகர்கள்                    வரை நடிக்கின்ற எந்த ஒரு படமானாலும் , இதை விட வேறு என்ன கருப்பொருள் இருக்கிறது...?

கதாநாயகர்களுக்கும், கதாநாயகிகளுக்கும் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான
 முக்கியத்துவம் எமது இளைஞர், யுவதிகளை தவறாக வாழி நடாத்தி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சினிமாவில் வரும் யதார்த்தத்திற்கு புறம்பான அம்சங்களை நிஜ வாழ்வில் பரிட்சித்துப்பார்க்க எமது இளைஞர்கள் முற்பட்டதன் விழைவையே இன்றைய சமூக தளத்தில் காண்கிறோம்.

ஈரான்    சினிமாக்களை போல், மாற்று சினிமாக்கள் தமிழில் இன்னும் வளர்ச்சி பெறவில்லை. பாரசிக நாகரிகத்தினதும், இஸ்லாமிய
நாகரிகத்தினதும் கலப்பான ஈரான் சினிமாக்களில் இருந்து தமிழ் சினிமாக்கள் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

உலகிற்கு சினிமா அறிமுகமான ஒரு சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே ஈரான் இற்கு சினிமா வந்து விட்டது. ஈரான் இல் சினிமா அறிமுகமானத்திலிருந்து பல்வேறு கட்டங்களையும் ஈரான் சினிமா தாண்டி வந்துள்ளது.

சினிமாவின் வருகையை தொடர்ந்து , மார்க்க அறிஞர்களின் கடுமையான எதிர்ப்பை அது சம்பாதித்தது. ஈரான் கலசாரத்திற்கும், சமூக அமைப்பிற்கும், அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாகவே அவர்கள் அதனை
பார்த்தனர்.  ஏனனில், அன்றைய சினிமா பெண்களையும், காதலையுமே மையப் படுத்தி இருந்தது.

இருந்தாலும், சினிமாவிற்கு நிலவிய அரசரினதும், அரச குடும்பத்தினதும் ஆதரவு, இத்தகைய எதிர்ப்பையும் மீறி சினிமா வளர்ச்சி பெருவதற்கு வாய்ப்பாக அமைந்தது.
1970 களில் தான் ஈரான் சினிமாவில் புதிய அலைகள் வீசத் தொடங்கின. ஈரான் சினிமாவில் குறிப்பிடத் தக்க வளர்ச்சி இத்தசாப்தத்திலேயே ஏற்பட்டது. அப்பாஸ் கியாரஸ்த்மி போன்ற முக்கிய இயக்குனர்கள் இத்தசாப்தத்தில் அறிமுகமானவர்கள்தான். எனினும்,
1978 இல் ஏற்பட்ட ஈரானிய புரட்சி நிலைமையை தலை கீழ் ஆக்கியது. ஈரானிய கலை துறையின் எதிர் காலம், இமாம் கொமேனி இனதும், அவரது மஜ்லிஸ் இனதும் கரங்களில் ஊசலாடியது.
இதுவரை காலம், வெளி வந்திருந்த பெரும்பாலான சினிமாக்கள் சராசரி சினிமாக்களை விட எந்த விதத்திலும், சிறந்ததாக இருக்கவில்லை. காதலும், பெண்களுமே இவற்றினதும் பேசு பொருட்களாக இருந்தன. இத்தகைய சினிமாக்களை அங்கீகரிப்பது,  ஷரீஆ சட்டங்களுக்கு முரணாகவும், இஸ்லாமிய சமூக அமைப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தது.

எனினும், சினிமாக்கள் சமூக தளத்திலும், பண்பாட்டு, கலாசார பெறுமானங்கள் மீதும் ஏற்ற்படுத்துகின்ற ஆழமான பாதிப்புகளை இமாம் கொமைனி நன்கு உணர்ந்து இருந்தார். எனவே, ஆரம்ப கால மார்க்க அறிஞர்கள் சினிமாவை தூக்கி எரிந்ததை போல், தூக்கி எரிவது ஒரு பொருத்தமான தீர்வாக அவருககுபபடவில்லை. இதற்கான ஒரு மாற்று தீர்வு குறித்து அவர்கள் யோசிக்கலாயினர். அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை இஸ்லாமிய மயப்படுத்துவது போல், சினிமாக்களையும் இஸ்லாமிய மயப்படுத்த முடியாதா என அவர்கள் சிந்தித்தனர்.

கலைகளை இஸ்லாம் வரவேற்கிறது. ஒரு சினிமா அது சினிமா என்ற ஒரே காரணத்தினால், ஹராம் என தீர்ப்பு வழங்குவது இஸ்லாத்தின் அடிப்படையான சட்ட விதிகளுக்கே முரணானது. ஒரு சினிமா அதன் கருப்பொருள், உள்ளடக்கம் என்பவற்றை வைத்து மட்டுமே ஹராம்  என தீர்ப்பு வழங்கப்பட முடியும்.

இத்தகைய கருத்தில் இருந்த ஈரானின் தலைமை சினிமாவை அனுமதித்தது மட்டுமன்றி, பெருமளவில் ஊக்கமும் அளிக்கத் துவங்கியது. எனினும், வன்முறை, அரைகுறை ஆடைகளோடு பெண்களை காட்சிப் படுத்துவது, காதல் என்பவற்றை தடை செய்தது. இது தான் ஈரான் மாற்று சினிமாக்களின் உதயமாகும்.

இதனால், புரட்சிக்குப் பிந்தைய நிறையப் படங்கள் சிறுவர்களை மையப்படுத்தி இருந்ததை அவதானிக்கலாம். விதிவிளக்காக, சில அரசியல் காரணங்களுக்காக, இந்த வரையறையை மீறி சில திரைப் படங்கள் வெளி வந்ததை மறுப்பதற்கில்லைதான்.

இருப்பினும், பொதுவாக ஈரான் சினிமா, ஒரு தனித்துவமான சினிமா கலாசாரம் ஒன்றை உருவாக்கியது. இந்த சினிமாக்கள் தான், உலகை ஒரு முறை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதன் சர்வதேச தரத்திற்கும், கீர்த்திக்கும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் அது பெற்றுக்கொண்ட, விருதுகளே போதிய சான்றாகும்.

மேற்கின் ஹாலிவுட் ஐப் போன்றோ, கிழக்கின் பாலிவுட் ஐப் போலோ அன்றி, ஒரு மூன்றாவது  பாதையிலும் பயணிக்கலாம் என்ற நம்பிக்கையை ஈரான் சினிமாக்கள் தருகின்றன.

ஹாலிவுட்   இடம், கலாசார பிச்சை கேட்டு கை ஏந்தி நிற்கும், தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் ஈரான் சினிமாக்களிடம் எப்போது பாடம் படிக்க  போகிறார்கள் என்பதே எம் முன் உள்ள கேள்வியாகும்.

(Pubslihed in Thinakkural, Sri Lankan Tamil Daily, Sunday Special Edition, 27th January 2008)
                                 
                                                                                                    Share

புகலிடம் & புரிதல் குறித்த சில குறிப்புக்கள்

இலக்கியமும் கலையும் தனி மனிதனும் சமூகத்தினதும் சிந்தனை தளத்தில்
ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தி விடக்கூடியவை. கலைகள் ஏற்படுத்துகின்ற நுண்மையானதும் கூர்மையானதுமான தாக்கம்  கலாசாரத்தின்  பல்வேறு  கூறுகளிலும்   பலமான அதிர்வுகளை ஏற்ற்படுத்தி விடுகின்றது.
குறிப்பாக சினிமாவை பொறுத்தவரை இந்நிலையை நன்கு அவதானிக்கலாம். சினிமா சமூகத் தளத்திலும், அரசியல்,  கலாசார  தளங்களிலும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து  மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள்  இதனையே  உறுதிப்படுத்துகின்றன.  இதனால் நவீன காலத்தில் சினிமா முக்கியமான ஒரு கருவியாக  இருப்பதை  காண்கிறோம்.

குறிப்பாக ஹாலிவுட் சினிமா யூதர்களால்  தமது,  பண்பாட்டு, கலாசார, அரசியல்  இலக்குகளை அடைந்து கொள்வதாற்காக திட்டமிட்டு  கையாளப்பட்டு  வருகின்றது.  முஸ்லிம்  சமூகத்தை  பொறுத்த  வரை  இத்துறையில் பாரியதொரு இடைவெளியே நிலவுகின்றது. அதிலும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் பற்றி கேட்கவும் வேண்டியதில்லை.
புலமைத்துவ மட்டத்தில் இது ஓரளவு உணரப் பட்டு இருந்த போதிலும்,  நடைமுறையில்  இதைச் செயல்  படுத்துவதில்  நிறைய  தடைகளை  எதிர்  கொள்ள  வேண்டி  உள்ளது.
முஸ்லிம் இளையர்கள் சாக்கடை சினிமாவில் உழன்று  சீரழிந்து  கொண்டுள்ள  நிலையில்,  எமக்கான சினிமாவின் தேவை குறித்து சமூகம் இன்னும்  உணர்ந்து  இருப்பதாக  தெரியவில்லை. சீரழிந்த சினிமாவை மட்டும் பார்த்து பழகிப் போன  சமூகத்திற்ற்கு சினிமா என்றாலே "சீ" என்ற மனநிலை தான் தோன்றுகின்றது.  இந்நிலையில் எமக்கான ஒரு சினிமாவை ஒருவாக்கி அதனை சமூகத் தளத்திற்கு கொண்டு செல்லல் என்பது ஒரு சவாலான பணி என்பதில்  சந்தேகமில்லை.

இத்தகைய  சவால்கள் அனைத்தையும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை  தரும் விதத்தில் வெளிவந்துள்ளது புகல்டம் and  புரிதல். SIM நிறுவனத்தின்  வெளியீடாக  முகிதீன் ஹசன், இஸ்மாயில் முஸ்டீன், மற்றும் அஷ்-ஷெய்க் A.B.M. இத்றீஸ் ஆகியோரின்  கூட்டு  முயற்சியில்  வெளி வந்துள்ள இந்த வெளியீடு  இரண்டு  குறும்  படங்களை  உள்ளடக்கி உள்ளது.

இலங்கை முஸ்லிம் சினிமா வரலாற்றில் இதனை ஒரு புதிய புறப்பாடு என்றும் சொல்லலாம். ஏற்கனவே, TRIM ARTS போன்ற  வெளியீட்டகங்கள்  ஈரான்  சினிமாக்களுக்கு தமிழில் sub tittle வழங்கும்  முயற்சியில்     ஈடுபட்டு இருந்தாலும் புகலிடம் & புரிதல் என்பன  முற்றிலும்  இலங்கை தயாரிப்பாகவே அமைந்துள்ளது.

இரண்டு குறும்படங்களும் மிகக் குறுகிய நேரமே காட்சி தந்தாலும், அவை  முன்வைக்க  முனைகின்ற கருவும், அதனை முன்வைக்க முயலும் பாங்கும், எம்மால்  நிறையவே  சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை தருகின்றது.

தொழில் நுட்பத்  தரம், ஒளிப்பதிவு என்பன போதிய  திருப்தியை  தராவிட்டாலும் ,  கன்னி  முயற்சியே இந்தளவு இருக்கிறது என்னும் போது, இலங்கை முஸ்லிம்  சினிமாவின்   எதிர் காலம் பசுமையாக  இருப்பதாகவே  எண்ணத் தோன்றுகின்றது.

(Published in எங்கள் தேசம் (Engal Thesam):  February 1-14, 2008)                                              
          
Share

சினிமா: ஒரு கலாசார ஆயுதம்...!




கலை என்பது ஒரு சமூகத்தின் உணர்வுகளையும் விழுமியங்களையும் பறை சாற்றும் ஒரு விடயமாகும். ஒரு சமூகத்தின் பெறுமானங்களும், விழுமியங்களும் உயரிய நிலையில் இருந்து கீழ் நோக்கி வரும் பொது, அச்சமூகத்தின் கலை, இலக்கிய வடிவங்களும் ஆபாச, வக்கிர உணர்வுகளை பிரதிபலிப்பனவாக பரிணானம் பெறுகின்றன.

Share

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்