யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

டார்வினிசத்தை அறிவியல் நிராகரிக்கிறது...!


"விஞ்ஞானிகளின் மூடநம்பிக்கை" என்ற எமது முன்னைய கட்டுரை ஒன்றில் நிறைய விஞ்ஞான உண்மைகள் என்று நாம் கருதுபவை அனைத்தும் உண்மையிலேயே ஆழமான அடித்தளத்தை கொண்டவையல்ல, பல போது அதிகார வர்க்கத்தின் அபிலாசைகளை திருப்திப் படுத்தும் ஒரு மறைமுக அரசியல் அந்த விஞ்ஞான கருத்துக்களின் பின்னணியில் இருக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தோம்.

அதில் டார்வினிஸம் குறித்து சில குறிப்புகளை தந்து போதிய அடிப்படைகளற்ற ஒரு வாதம் அது எனச் சொன்னோம். சாள்ஸ் டார்வின் அவர்கள் முன்வைத்த பரிணாம வளர்ச்சி குறித்து மேலும் சில அம்சங்களை இங்கு நோக்குவோம்.
Share

ஒரு சோகமான முடிவுரையோடு...




பைனஸ் மரங்கள் ஆடும் அசைவில்
மெல்லிய காற்று மேனியை வருடிச் செல்லும்...!
காலை நேரத்து பனிக்கூட்டம் தேகத்தை
அணைத்துக்கொள்ளும்...!

இளஞ்சூரியன் அனாயாசமாக அள்ளித்தெரிக்கும்
சூரிய கதிர்கள் ஒரு புதிய நாளை உறுதியோடு ஆரம்பிக்க வஸிய்யத் செய்யும்...!

உடற்பயிற்சிக்கான நீண்ட
அணிவகுப்பு அலுப்பைத்தரும்...!
அதட்டும் மாணவர் தலைவர் கூட்டம்
எரிச்சலை ஊட்டும்...!

ஒரு சோம்பேறி ஆசிரியர் கூட்டம்
கதையளந்து வேடிக்கை பார்க்கும்...!
இனிய குரலில் கிராத் ஒளி தூரத்து
மலையில் பட்டு எதிரொலிக்கும்...!

காலை மணி அருவலை ஊட்டும்...!
இடை வேலை நேரங்களில் கிளை பரப்பி
நிழல் தந்த அந்தப் பெயர் தெரியாத
பூ மரம் தினமும் முற்றத்தை
பெருக்கச் சொல்லி அடம் பிடிக்கும்...!

ஸ்கூல் கட் அடித்தலால் சுழலும் அந்த
தும்புக்கட்டைப் பிடி
உள்ளங்கையில் அடையாளத்தை பதித்துச் செல்லும்...!

வீட்டு வேலையை உருப்படியாகச் செய்யாததால்
முட்டங்காலில் நிற்கையில் தூசுத்தரை வெள்ளாடையில்
கையெழுத்திடும்...!

தூரத்தில் கேட்கும்  பரம்பின்
சுழற்சி  சப்தத்தில் முழுக் மண்டபமும்
 மௌன ராகம் பாடும்...!

அனைத்தும் தெரிந்த ஒரு
பழைய மாணவர் கோஷ்டி கல்லூரி எங்கும்
சுற்றித்திரியும்...!

ஒரு சோகமான முடிவுரையோடு
கல்லூரி வாழ்வு முற்றுப் பெரும்...!

இன்னொரு போராட்டமும்,
நினைவுகளை பத்தித்து
 செல்லும் வாழ்வும் அதன் பிறகு துவங்கும்...!   
Share

யுத்த பூமியின் அச்சம் சூழ்ந்த இரவைப் போன்றே...!


இரவுகள் நீண்டு செல்கின்றன...!
நாய்களின் குறைப்போசையோடு  உருவாகும் இரவு நேரத்து
வெறுமை உள்ளத்தை வாட்டி எடுக்கிறது...!
எதிர்காலம் குறித்த நம்பிக்கை இன்றியே
விருப்பமின்றிச் செய்யும் தர்மத்தின் கஷ்டத்தோடு
விழிகளைத் தழுவுகிறது உறக்கம்...!

எதுவும் செய்வதற்கு வேலைகளற்ற
காலைப் பொழுதுகள்...!
உற்சாகமற்ற விடியல்கள்...!
அர்த்தமற்று கழிந்து செல்லும் நேரம்...!
கையாலாகாத் தனத்தை நொந்து கொண்டு
 உள்ளத்தை பிழியும் வேதனை...!


பொறுப்பற்ற சமூகத்தின் குத்தல்
மொழிகள்...!
உதவி புரியும் போர்வையில் நடக்கும்
கழுத்தறுப்புக்கள்...!
படித்த படிப்பும், விழித்த இரவுகளும்
ஒரு பெறுமானம் அற்றுப் போகும் கணங்கள்...!

கைச்செலவையும்   சொந்தப் பணத்தால்
செய்ய முடியாத கையாலாகாத்தனம்...!

தோள் கொடுக்க  வேண்டியவர்களே உதைத்துத் தள்ளும்
கஷ்டமான அனுபவங்கள்...!

 கழுத்தருப்பிற்கே காத்திருக்கும்
 கழுகுக் கூட்டங்கள்...!

நானும் ஒரு வேலையில்லாப் பட்டதாரி...!

உற்சாகத்தோடு விடியும்
ஒரு விடியலை எதிர் நோக்கிக்
காத்திருக்கிறேன்...!

அச்சம்
 சூழ்ந்த ஒரு யுத்த பூமியின் இரவைப் போல்
அதுவும் நீண்டு செல்கிறது...!                                                                                                                                                         
                                                                                                                       Share

இது யாத்திரிகைக் காலம்...!


நீங்கள் கொடுத்து வைத்தவர் ஹாஜியார்...!
வருடம், வருடம் சென்று அல்லாஹ்வின் வீட்டை
தவாப் செய்கிறீர்கள்...


பத்திரமாய் சென்று வாருங்கள்...
பட்டினியோடு கிடக்கிறேன்...
நீங்கள் திரும்பி விரும்பி வரும் போது
 உயிர் உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தால்
மீண்டும் சந்திக்கலாம்...
இன்ஷா அல்லாஹ்..!

Share

சம்பிரதாயச் சிறைகள் உடைந்து நொறுங்கட்டும்...!


பாவை என்று சொன்னான் உன்னை
தமிழ் கவிஞன்!
அடுத்தவன் பாட்டுக்கு
 ஆடும் பாவையாகவே போய் விட்டாய் நீ!

நிலவுக்கு ஒப்பிட்டார்கள் உன்னை...!
உலகுக்கு ஒளி தர வேண்டிய நீயே
இருளில் வாழலாமா?

இருண்ட உலகிற்கு பந்தலை ஏந்திச் செல்ல வேண்டிய  புரட்சி வீரன்
சூழ் கொள்ள வேண்டியது உன் வயிற்றில் தான்...!
நீயே
இருளில் இருந்தது கொண்டு
அவனுக்கு பந்தம் கொடுக்க என்ன செய்வாய்?

ஒரு மனிதனின் முதல்
சர்வ கலாசாலை நீ...!
உன்னை யார் தடை செய்தார்
சர்வ கலாசாலை செல்வதற்கு...!



நீ
முக்காடு அணிவதே
உன் கண்ணியத்தை பாதுகாக்க...
முக்காட்டை வலியுறுத்தும் சமூகம்
உன் கண்ணியத்தை ஏன் மறந்து போனது?
நீயும் ஆணுக்கு
சமமானவள்தான்...!
மார்க்கம் என்று நினைத்து உன்னை அடிமையாக
நினைக்கிறது இந்த முரட்டுக் கூட்டம்...!

வா...
வெளியில் வா...
உன்னை சூழப் போடப்பட்டிருக்கும்
சம்பிரதாய வெளியைத் தாண்டி...

உனக்குள்ளும் ஒரு புரட்சி வெடிக்கட்டும்
உன்னை  சூழ எழுந்து நிற்கும் சம்பிரதாயச் சுவரை
அடித்து நொறுக்கட்டும்...

உன் கோபம் எரிந்து சாம்பலான
தேசத்தை கட்டி எழுப்பட்டும்...

உன் கட்டுப்பாடு
எழு வானங்களுக்கு மேழுள்ளவனுக்கு மட்டும்
எனறாகட்டும்...!

உன் பெற்றோரோ, மற்றோரோ உனக்கு
அல்லாஹ் தந்த உரிமைச் சுவரை
தாண்டாமல் இருக்கட்டும்...!

புதிய பார்வையோடு...
ஒரு புது உலகம் தேடித் பயணிக்கும்
யாத்ரீகர் கூட்டத்தில்
இனி நீயும் ஓர் அங்கம்...!

இனி ஒரு சுதந்திரக் காற்று உன்னை
வருடிச் செல்லும்...

இறைவன் விதித்த
உரிமைச் சுவரை
தாண்ட முனைவோரை
தாக்கும் புயலாய் அது மாறும்...!
   

Share

விஞ்ஞானிகளின் மூட நம்பிக்கை...!


பரிசோதனை, அவதானம் என்பவற்றின்  மூலம் பகுத்தறிவு பூர்வமாக எதனையும் அணுகி  உண்மைகளை வெளிக்கொணர்வதே விஞ்ஞானம் என பொதுவாக கருதப்படுகிறது. உயிரியல் விஞ்ஞானமாயினும், சமூகவியல்  விஞ்ஞானமாயினும் இதுதான் அடிப்படை.
Share

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்