யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

நான் விரும்பி ரசிக்கும் கணங்கள் ...



விடிந்தும், விடியாத
சாம்பல் நிற
அதிகாலை பொழுதின் அமைதி...!

ஏழையின் முகத்தில் இயல்பாகத்
தோன்றும் புன்னகை...!

ஒரு மழை இருட்டு அந்திப் பொழுதில்
தூரத்து தென்னை மரத்தில் பட்டுத்தெறிக்கும்
மாலை வெயில்...!

உலகம் உறங்கி விட்ட நடு நிசியில்
இரவு நேரத்தில் நேரத்தில் மட்டுமே சஞ்சரிக்கும்
சிறிய உயிர்களின் ஓசை...!

நிஜமாக நேசிக்கும் நண்பர்களோடு
சேர்ந்திருக்கக் கிடைக்கும்
அரிதான கணங்கள்...!

என்னாலும் மற்றொருவன் பிரயோசனம்
அடைகிறான் எனும் போது
உருவாகும் ஆழ் மனத்திருப்தி ...

ஈமானிய உணர்வு உச்ச கட்டத்தை
அடையும் போது தொழும் நீண்ட இரண்டு ரகஅத்துகள்...

நீதி மறுக்கப்பட்ட ஒருவனுக்காக
குரல்  கொடுக்க
நினைக்கையில் மனதில் உருவாகும் தைரியம்...!

பிரச்சினைகள் உச்ச கட்டத்தை
அடையும் போது
உதவி புரிய முடியுமானவர்கள் கைவிட்டுச் செல்ல
உதவி புரிய முடியாதவர்கள் சொல்லும் குறைந்த பட்ச
ஆறுதல் வார்த்தைகள்...

முழுமையாக உழைத்துக் கலைத்து
செலவழித்த ஒரு நாள்
முடியும் தருவாய்...!

உள்ளம் நிறைந்த நிலையில் உறங்கும் உறக்கம்...

நீண்ட குரலில் ஒலிக்கும்
குர்-ஆன் ஓசை

மழலை மொழி பேசி கொஞ்சும் குழந்தைகளோடு
சிரித்து விளையாடும் நேரங்கள்...!

என்னை வெருத்தொதுக்கியவனுக்கே
உதவி புரிய கிடைக்கும் 
சந்தர்ப்பங்கள்...!

இலட்சியம்
 ஈடேறும் என்று ஏற்படும் நம்பிக்கை...!

 எத்தனையோ, எத்தனையோ
நான்
 விரும்பி ரசிக்கும் கணங்கள் என்  வாழ்விலும்...!

Share

திரை கிழியட்டும்...

உன் உடலோடு சேர்த்து
அறிவுக்கும் யார் சொன்னார்
திரையிடச்சொல்லி?


பாத்திமாவும் ஆயிஷாவும்
திரையிட்டுத்தான் இருந்தார்கள்...
அறிவுக்கு திரை போட எப்போது சொன்னார்கள்?

உடம்பை மட்டும் தான் நீ மறைக்க வேண்டும்
அறிவையல்ல...

உன் கால்களுக்கு விலங்கிட்ட அந்தக் கயவன் யார்?

கிழித்தெரி
உன் முகத்திரையை அல்ல...
உன் அறிவுக்கு இட்ட திரையை..

உடைத்திடு
 உன் கால்களுக்கு
விலங்கிட்டவன் கரங்களை...

மாறி விடு...


முகம்மத் நபி ஆசித்த ஒரு
புதுமைப்பெண்ணாய் நீ...

நாளை ஒரு புது உலகம்
உன் கரங்களில் தயாராகட்டும்!    Share

நினைக்க முன்பே முடிந்து விட்டது...

ஒரு மலர் மொட்டுதிர்க்கும் முன்பே
உதிர்ந்து விட்டது...
பேனா திறக்குமுன்பே மை  தீர்ந்து போனது...
சூரியன் உதிக்கும் முன்பே மறைந்து விட்டது...
மனிதன் பிறக்கும் முன்பு
கருவறையே அவனுக்கு கல்லறையாகிப்போனது...

மாறி முடியுமுன்பே குளங்கள் வற்றத்துவங்கி விட்டன...
வாசித்து முடிக்கு முன்பே ஒரு புத்தகம் மூடி வைக்கப் பட்டு விட்டது...

ஒரு உயிரை இறக்கும் முன்பே புதைத்து விட்டார்கள்
பயணி ஏறிக்கொள்ள முன்பே ரயில் புறப்பட்டு விட்டது..

கோடை துவங்கும் முன்பே பறவைகள் தாகத்தால் இறக்கத்துவங்கின...
இலையுதிர் ஆரம்பிக்க முன்பே மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டன...

சேவல் கூவும் முன்பே ஒரு இரவு தீர்ந்து விட்டது...
நாம் பழகும் முன்பே
பிரிந்து சிதறிப்போனோம்
அவிழ்ந்து வீழ்ந்த தஸ்பை மணிகளாய்...

கல்லூரி வாழ்வு...
நாம் நினைக்க முன்பே முடிந்து விட்டது...  
  Share

தடைச்சுவர்... 02


முதல் பகுதி
இரண்டாம் பகுதி
வந்தவன் முபீன் ஹாஜியாரின் மகனாக இருக்கலாம்.

நல்ல நிறமாக ஒரு ஐரோப்பியனை  போல் இருந்தான்.  உடைகள் யாவும் நாகரிகத்தை காட்டின. விலையுயர்ந்த ஒரு சங்க்லாசை அணிந்து நெற்றி வரை உயர்த்தி விட்டிருந்தான். அவன் அணிந்திருந்த பாதணி முகம் பார்த்து தலை சீவலாம் போல் அவ்வளவு பளபளப்பாக இருந்தது.  எங்கோ செல்வதற்கு வெளிக்கிட்டிருந்தான். அவனுக்கும் ஷெரீபின் வயது இருக்கலாம்: அல்லது   அவனை விட ஒரு சிறிது இளையவனாக இருக்கலாம்.
Share

தடைச்சுவர்... 01


தொலை பேசியில் கதைத்து முடித்த ஷெரீப், ஏமாற்றத்தோடு வைத்தான். கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் இந்தத் தனியார் கம்பனியில் நேர் முகப் பரீட்சைக்கு போய் வந்திருந்தான். அடுத்த நாளே முடிவை தருவதாக சொல்லி இருந்தார்கள். ஆனால், ஒரு வாரம் ஆகியும் எந்த முடிவும் வரவில்லை.

Share

சேய்மைப் பட்டுப் போகும் இதயங்கள்...

ட்ரூ... ட்ரூ... ட்ரூ...
ஆட்டோ சப்தம். சத்தார் களைப்பாக வந்து இறங்கினான்.
இரவு பதினொன்றரை மணி இருக்கலாம். ஊரெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது. எந்த சப்தமுமில்லை.

தூரத்தில் கேட்ட தெரு நாய்களின் குறைப்போசையும், இரவு நேரத்தில் மட்டுமே சஞ்சரிக்கும் இரவு நேரத்து உயிர்களின் சப்தமும் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. அந்த மயானமான நிசப்தம் ஒருவித பீதியையும் தந்தது.

வானத்து விண்மீன்களின் நீளமான அணிவகுப்பு. ..
இருட்டுக்குப் பயந்து கறுப்புப் போர்வை போர்த்தி உறங்கும் தூரத்து மலைகள்...
ஆழ்ந்து உறங்கும் மரங்கள்
அவை புரண்டு படுப்பதாலோ என்னவோ எழும் ஓசை
அதனோடு
சேர்ந்து வரும் மெல்லிய தென்றல்

இவற்றில் எதனையும் ரசிக்கும் நிலையில் சத்தார் இல்லை. ஆட்டோவிற்குரிய கூலியை கொடுத்து அனுப்பினான். பகல் முழுதும் உழைத்துக் களைத்த வடு அவன் முகத்தில் கையெழுத்திட்டிருந்தது. காலையில் ஒன்பது மணிக்கு கடையை திறந்தால், இரவு பத்து மணியாகும் மூடுவதற்கு... பலசரக்குக்கடை.

கடையை மூடினால் சாமான்களை ஒழுங்கு
 படுத்துவது, அன்றைய கணக்கு வழக்குகளை பார்ப்பது, கடையை துப்புரவு செய்வது, தேவை அற்றவற்றை அகற்றுவது எல்லாம் அவன்தான். இத்தனையும் முடித்து வீடு சேர எப்படியும் பதினொன்றை மணியாகும்.

இன்றும் அப்படித்தான்...

வீட்டு மணியை அழுத்தினான். அரைத்தூக்கத்தில் மணைவி சபீனா கதவை திறக்கிறாள்.

மெதுவாக வீட்டினுள் நுழைகிறான்.

"நுஸ்ரி, இவ்வளோ நேரம் அழுதுட்டு இப்பதான் தூங்குற. சரியான இருமல், ஒரு ஜாதி காச்சல் மாதி. நாளக்காலும் மருந்து எடுக்கோணும்".

சத்தார் எதுவும் பேசவில்லை. மெதுவாக அறைக்குள் நுழைந்தான். தான் வீட்டுக்கு வந்த உடனே வீட்டு பிரச்சினை எதயாலும் பேசுறது சத்தாருக்குப் பிடிக்கவே பிடிக்காது. 'அடுப்படில உப்புத்தூள் முடிஞ்சதிலீந்து, பக்கத்தூட்டு காணிச் சண்ட  வர, மாப்புள வந்தோனே கதைக்காட்டி இவளுக்கு தூக்கமே வராது போலீக்குது'. சத்தாருக்கு கோபம்.

மனுஷன் காலைல ஈந்து கஷ்டப்பட்டு நொந்து போய் வாரான். இங்க வந்தோனக்கி இங்கயும் எனத்தயாலும் பிரச்சினைதான்.

சபீனா வீட்டு பிரச்சினை எதைப் பத்தி பேசினாலும், சத்தாருக்குப் பிடிக்காது. அவனும் கடைப் பிரச்சினைகளை அவளிடம் கதைக்க மாட்டான்.

இதனால், வீட்டில் அவன் பெரிதாக பேசுவதில்லை. உம்மென்று வாயை வைத்துகொள்வான். சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கி விடுவான்.

கலகலப்பாக வீட்டில் பேசிச் சிரித்த நாட்களே ஞாபகமில்லை சத்தாருக்கு. காலையில் எழுந்து, பல் துலக்கி, ஒரு டீயை குடித்து, குளித்து விட்டு கடிக்குப் போனான் என்றால், மீண்டும் நள்ளிரவில் தான், களைப்போடு திரும்பி வருவான். இதில் எங்கே அவனுக்கு கலகலப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்க நேரம் இருக்கப் போகிறது?

ஒரு மௌனமான வேதனையை அவர்கள் இருவரும்  அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.



 ###
அதுவெல்லாம் இப்போது
 கனவைப் போல் இருக்கிறது. அப்போது சத்தார் தெலும்புகஹவத்தை வீதியில் வெட்டியாக சுத்திக்கொண்டிருந்தான். அவன் ஒரு வாட்ட சாட்டமான இளைஞன். அழகாக
 உடைகளை தெரிவு செய்து அணிந்து கொள்வதில் அவனுக்கு நிகர் அவன்தான். தலைமயிரை அழகாக 'கெப் கட்' வெட்டியிருந்தான். அந்த நாட்களில் அதுதான் பெஷன். சிலருக்கு 'கெப்கட்' சிரட்டையை வழித்தது போல் அசிங்கமாக இருக்கும்: அவர்களை பார்த்ததும் ஏனோ, ஆபிரிக்க காடுகளில் வாழும் வித விதமான குரங்குகள் ஞாபகம் வருவது தவிர்க்க முடியாது.
Share

துறைமுகம்- தோப்பில் முகம்மத் மீரானின் ஒரு சமூக நாவல்

"குமரி மாவட்டத்தில் வாழும் கடற்கரையை ஒட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை. ஆனால், இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும், எல்லா சமூகங்களுடனும் பொருந்திப் போவது... எழுத்தில் நாவல் முடிந்து விட்டாலும் நம்முள் நீள்கிறது..."


இது "துறைமுகம்" நாவலின் பின்னட்டை அறிமுகம்.

கதை இடம்பெற்ற காலம் சுதந்திரத்திற்கு சிறிது முற்பட்ட காலப்பிரிவு.
எல்லா சமூகத்திலும் இருக்கும் கொடுமைகள் இந்த முஸ்லிம்  சமூகத்திலும் இருக்கிறது. ஏழைகளையும், தொழிலாலர்களையும் சுரண்டும் முதலாளி வர்க்கம், மதத்தின் பெயரால் இடம்பெறும் அநீதிகள், அதிகார வர்க்கத்தின் முரட்டுத்தனம்
... இவை அனைத்து சமுதாயங்களிலும் புரையோடிப்போயுள்ள அழுக்குகள்.



மீரான் பிள்ளை, மம்மாதில், காசிம், மம்மதாஜி, பரீத் ஹாஜியார், ஈனா பீனா கூனா போன்ற பிரதான பாத்திரங்களை சூழத்தான் கதை பின்னப்பட்டுள்ளது. தோப்பில் முகம்மத் மீரான் தனது ஆற்றொழுக்கான நடையில் கதையை அற்புதமாக புனைந்திருக்கிறார். நாவல் முழுதும் அரபு கலந்த தமிழ் பிரதேச வழக்கு அந்த மக்கள் கூட்டத்திரளோடு எமது உணர்வலைகளை சங்கமிக்க வைக்கிறது.

இந்த கிராமத்து மக்களின் ஜீவனோபாயம் மீன்பிடி. அதை தவிர வேறு தொழிலும்  தெரியாது. தப்பித்தவறி கடல் ஏமாற்றி விட்டதென்றால், அவர்கள் பாடு அவ்வளவுதான்.


Share

கவிழும் ஓடங்கள் (02)


முதல் பகுதி
இரண்டாம் பகுதி

நள்ளிரவு பன்னிரெண்டை தாண்டி இருந்தது. உலகம் இருள் போர்வையை போர்த்திக்கொண்டு உறங்கிக் கிடந்தது. நாய்கள் குறைக்கும் சப்தமும், நரிகள் ஊழை இடும் சப்தமும், இரவு நேர உயிரினங்களின் ஓசையும் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இருந்திருந்தாற்போல் வாகனங்கள் செல்லும் ஓசை கேட்டது. வவ்வால்கள் சிறகடிப்பது கூட அந்த அமைதியில் தெளிவாகக் கேட்டது.


நாசிரின் எண்ணக் கடல் மட்டும் அமைதியின்றி  கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஏராளமான எண்ண  அலைகள் அவனது மனதில் ஆர்ப்பரித்துகொண்டிருந்தன. தூக்கம் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கடந்து சென்ற சம்பவங்கள் மீண்டும், மீண்டும் அவன் நினைவில் வருவதற்கு அந்த அமைதி அவனுக்கு வழி செய்து கொண்டிருந்தது. பத்து மணியில் இருந்து முயற்சி செய்து கொண்டிருந்தான். அவனையும் மீறி நினைவுகள் அவன் கண் முன் தோன்றி அவனை படாதபாடு படுத்துகிறது. தூக்கத்தை சிதறச்  செய்கிறது. சிறுவர்களின் மணல் வீட்டை கடல் அடித்துச் செல்வது போல.

அவனது கனவுகளும் இப்படித் தான் சிதரப்போகிறதா?
Share

கவிழும் ஓடங்கள் (01)

அஸ்ஹர் கல்லூரி. காலை சரியாக எழு முப்பது. மாணவர்களை அமைதிப் படுத்தும் சைலன்ஸ் பெல் கம்பீரமாக ஒலித்தது. கல்லூரியின் உள் மைதானத்தில் உடற்பயிற்சிக்காக கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் பயங்கர அமைதி. வெள்ளை ஆடையில் மாணவர்களும், மாணவிகளும் வரிசையில் நிற்கும் அருமையான காட்சி.

காலை நேர இளம் சூரியன் தன் கிரணங்களை மெல்லப் பாய்ச்சிக் கொண்டிருந்தான். சூரினை கண்டு வெட்கப்பட்ட பனிக்கூட்டம் மெல்ல நழுவிக்கொண்டிருந்தது.

மெதுவாக தேசிய கொடியும், பாடசாலை கொடியும் ஏற்றப்படுகின்றன. கணீரென்ற இனிய குரலில் கிராத், மைதானம் எங்கும் எதிரொலிக்கிறது.

கிராத் முடிய மீண்டும் மணி ஓசை. மாணவர்கள் களைந்து செல்கிறார்கள். மாணவத் தலைவர்கள் அவர்களை வரிசையாக ஒழுங்கு படுத்தி வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். எறும்புகள் ஊர்வது போல் மாணவர் கூட்டம் மெதுவாக நகர்கிறது.

சிறிது நேரத்தில் மாணவர் கூட்டம் முற்றாக வகுப்புகளுக்கு சென்று முடிந்து விட்டது. பாடசாலை எங்கும் ஒரு வித அமைதி.


கல்லூரி நுழைவாயில் அருகில் இன்னும் ஒரு இருபத்தைந்து மாணவர்கள் அளவில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் "லேட் கமர்ஸ்". அவர்கள் மத்தியில்தான் நாசிர் நின்று கொண்டிருந்தான். இலேசான நடுக்கம் அவனுக்கு இருக்கவே செய்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் லேட் அவன்.

அவன் நேர காலத்தோடே பாடசாலை வந்து விட்டாலும், இப்போது சில நாட்களாக அவன் தொடர்ந்தும் பிந்தி வந்து கொண்டிருந்தான். அதற்கு காரணம் சில காலமாக உணர்ந்து வந்த பாரமான அனுபவங்கள். அதனால் இரவில் நீண்ட நேரம் வரை தூக்கம் இன்றி அவதிப்பட்டான். காலையில் எழு மணி வரை இப்போதெல்லாம் தூங்கி விடுகிறான்.
Share

வேதம் ஓதும் சாத்தான்கள்...

ஏப்ரில் மாத உஷ்ணமான வெயில்  அகுரணை நகரை  சுட்டுப்பொசுக்கியது.  எதிர்ப்படும்  அனைவர் முகங்களிலும் அதன் பிரதி  பலிப்பு.  ரிப்கான்  மெதுவாக நடந்து வந்தான். அவனது நடையில் தளர்ச்சி.
நம்பிக்கையோ, எதிர்பார்ப்போ அற்ற முகத்தோற்றம். நெற்றியில் வாழ்கையின்
 அனுபவங்கள் கிழித்த ரேகைகள்.

ரிப்கான் மெல்ல நடந்து சுபைர்தீன் ஹாஜியாரின்  வீட்டை  நோக்கி  சென்று  கொண்டிருந்தான். காணியொன்றை விற்கும் முயற்சியில் அண்மையில் இறங்கி இருந்தான் ரிப்கான். பலரை சந்தித்தும் கதைத்தும் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. கடைசியாக சுபைர்தீன் ஹாஜியாரை நாடி இருந்தான். அவர் விபரங்களை கேட்டு விட்டு, இன்று அவனை வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தார்.

####
ரிப்கான்.. அவனுக்கு வயது முப்பத்தைந்தில் இருந்து நாற்பது வரை இருக்கலாம். இரண்டு பிள்ளைகள், மணைவி, பெற்றோர், இரண்டு தங்கச்சிமார் அனைவரும் அவன் ஒருவனின்  உழைப்பில்தான்  வாழ்ந்து  கொண்டிருந்தனர். அவன் ஒரு சிறிய சாதாரண கடை செய்து கொண்டிருந்தான்.
அவனது சம்பாத்தியம் இவர்கள் அனைவரையும் பட்டினியின்றி வைத்திருப்பதற்கு கூட போதவில்லை. போதாக்குறைக்கு உயர்ந்து செல்லும் வாழ்கைச்செலவு, பிள்ளைகளின் கல்விச்செலவு, பெற்றோரின் மருந்துச் செலவு, கல்யாண வயதில் இருக்கும் தங்கச்சிமார்... இவை அனைத்தும் சேர்ந்து அவனால் தாங்க முடியாத சுமைகளாக இருந்தன.

Share

என்னையும் கொஞ்சம் வாழ விடு...!

துள்ளித்திரிந்த என் இளமையை
திருடிக்கொண்டீர்கள்...
துன்பக் கேணியாக்கி என்
 வாழ்வை,
தூசுப்பட்டரையில் என்னை தூங்க வைத்தீர்கள்...
நான் தொலைத்து விட்ட  அந்த சிறுவர் பருவம்
மீண்டும் வேண்டும் எனக்கு...

உன் பூட்ஸ் கால்கள் மிதிக்கும் வெறும் துரும்பாகத்தானே
ஆகிப்போனேன்...
நானும் ஒரு மனிதன் என்று ஒரு சிறிதாவது நினைத்துப் பார்த்தாயா?...

வீழ்ந்து சிதறிய பதர்களாகிப் போனேன்...
நான் இழந்தது என்ன ஒன்றிரண்டா? அத்தனையையும்
சொல்லி விட...

வெறுமையாய் போகும் எனது நாட்கள்...
வாழவும்  இயலாத, சாகவும் இயலாத கணங்கள்...
என் கால்களை விலங்கிட்டுள்ள உன் சமூக 'விலங்குகள்'...
நாரிப்புளித்துப் போன உனதான  கௌரவங்களின்
அழுகிய வாசனை...
பொறுக்க முடியவில்லை...
மூக்கை அடைத்துக்கொகொள்கிறேன்...

நீயும் வேண்டாம்...
உன் உறவும் வேண்டாம்...
என்னை வாழ விடு...
தனியாய், அமைதியாய், எளிமையாய்
என் போக்கில்,
ஆர்ப்பாட்டமின்றி...

நீ போட்ட சமூக தரத்திற்கு என்னை
ஏற சொல்லாதே...
குற்றுயிராய் கிடக்குறேன்...
சறுக்கி விழுந்தால் செத்து விடுவேன்...

தயவு செய்து என்னை வாழ விடு...

இல்லை,
விட மாட்டாய்...

கடைசி மூச்சியை சுவாசித்து முடிக்கும் வரை...
நீ விட மாட்டாய் என்னை வாழ்வதற்கு...

ஒன்றை மட்டும் நினைவில் கொள்..
முடிவு செய்து விட்டேன்..
உயர்ந்து நிற்பேன்...
அல்லது செத்து மடிவேன்..
உனக்கு முன் கைகட்டி வாழ்ந்த அடிமை வாழ்வு போதுமெனக்கு...
       Share

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்